2019-ஆம் ஆண்டு இடைத்தேர்தலில் 9 எம்.எல்.ஏ க்கள் கிடைத்த பின்னரே முதல்வர் ஆட்சி நிலையானதாக அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் அதிமுக சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அமைச்சர் கடம்பூர் ராஜு, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவிற்கு பின்னர் 2017-ஆம் ஆண்டில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஆட்சி அமைந்தது. ஆனால், அந்த ஆட்சி நிலையான ஆட்சியாக மாறியது, 2019-ஆம் ஆண்டு நடைபெற்ற இடைத்தேர்தலில் பெற்ற வெற்றிக்கு பிறகுதான் எனவும் முதல்வர் தொடர்ந்து 2 ஆண்டுகள் நீடிக்கவும் இடைத்தேர்தல் வெற்றி என கூறினார்.
2019-ஆம் ஆண்டு நடைபெற்ற இடைத்தேர்தலில் அதிமுக, பாமக உடன் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொண்டது. இதனால் இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி காரணம் பாமக என அக்கட்சி இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறி வந்தார்.
தமிழகத்தில் முதல்வர் ஆட்சி நீடிக்கவே பாமக ஆதரவு தான் காரணம் என அக்கட்சியினர் கூறி வந்த நிலையில், அதற்கு ஏற்றாற்போல அமைச்சர் கடம்பூர் ராஜு பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், அதிமுகவிற்கு பாமகவின் ஆதரவை கருதியே வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கியதாக கூறப்படுகிறது.
டெல்லி : கடந்த பிப்ரவரி மாதம் மேற்கொள்ளப்பட்ட அமெரிக்க பயணத்தின் போது தொழிலதிபர் எலான் மஸ்க்கை பிரதமர் நரேந்திர மோடி…
சென்னை : தமிழ்நாட்டில் முதல் முறையாக ஏசி பெட்டிகள் கொண்ட முதல் மின்சார ரயில் சேவை இன்று காலை 7…
பெங்களூர் : நேற்றைய ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதின. பெங்களூரு சின்னசாமி…
பெங்களூர் : பெங்களூரு மற்றும் பஞ்சாப் அணிகள் மோதும் இன்றைய ஐபிஎல் போட்டி, மழை காரணமாக 14 ஓவர் போட்டியாக…
சென்னை : சூர்யா, கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் உருவாகியிருக்கும் 'ரெட்ரோ' படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டிருக்கிறது. இரண்டு மாதங்களுக்கு முன்பு…
பெங்களூரு : பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் பெங்களூர் - பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று நடைபெறவிருக்கிறது. இரு அணிகளும்…