14 தொழில் பிரிவினருக்கு ரூ.1000 வழங்கும் அரசாணை வெளியீடு.!

Default Image

அரசால் அங்கீகரிக்கப்பட்ட 14 தொழில் பிரிவினருக்கு கொரோனா நிவாரண நிதியாக ரூ.1000 வழங்கும் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

மீனவர்கள், சிறு வணிகர்கள், திரைத்துறை தொழிலாளர்கள் உள்ளிட்ட அங்கீகரிக்கப்பட்ட 14 தொழில் பிரிவினருக்கு கொரோனா நிவாரண நிதியாக ரூ.1000 வழங்கும் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதில் மத்திய பேரிடர் மேலாண்மை நிதியில் இருந்து 86.05 கோடி நிதி ஒதிக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதனால் சுமார் 8 லட்சத்து 60 ஆயிரத்து 536 தொழிலார்களா பயனடைவார்கள் என்று தெரிவித்துள்ளனர்.

நாடு முழுவதும் ஊரடங்கு காலம் நீடிக்கப்பட்டதால் மக்கள் வீடுகளிலேயே முடங்கி இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் தங்கள் பொருளாதாரத்தை இழந்து தவித்து வருகின்றன. இதன் காரணமாக தமிழக அரசு அரசால் அங்கீகரிக்கப்பட்ட தொழில் பிரிவினருக்கு ரூ.1000 வழங்கப்படும் என முதல்வர் பழனிசாமி தெரிவித்திருந்தார். இந்த நிலையில் அதற்கான அரசாணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்