இது நாங்கள் படித்த அரசு பள்ளியா?… தத்தெடுத்த முன்னால் மாணவர்கள்… முதலில் 2 லட்ச ரூபாயில் சீரமைப்பு… முன்மாதிரியாக திகழும் முன்னால் மாணவர்கள்…

Default Image

மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள அ.வள்ளாலபட்டி அரசு மேனிலைப் பள்ளி கடந்த 1961-ம் ஆண்டு துவங்கப்பட்டது. இப்பள்ளியில், வள்ளாலபட்டியை சுற்றியுள்ள கிராமங்களான புலிப்பட்டி, வலையபட்டி, அழகர்கோவில்,செட்டியார்பட்டி பகுதியைச் சேர்ந்த சுமார் 800-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் தற்போது படிக்கின்றனர். மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப்ப  இப்பள்ளியில் சுமார் 40 வகுப்பறைகள் உள்ளன. இதில், சில வகுப்பறைகள் பயன்படுத்த முடியாத அளவிற்க்கு மிகவும் சேதமடைந்திருந்தது. இதை அறிந்த முன்னாள் மாணவர்களான 1991 மற்றும் 1993-ம் ஆண்டு பிளஸ் 2 படித்த மாணவர்களில் பலர் தற்போது, ஐஏஎஸ், ஐஆர்எஸ் மற்றும் டாக்டர், இஞ்ஜினியர் மற்றும் ராணுவம், காவல்துறை உள்ளிட்ட உயர் பதவிகளில்  பணியாற்றி வருகின்றனர். இவர்கள் அவர்கள் பள்ளியின் நிலைமையை அறிந்து  தாம் படித்த பள்ளியை மேம்படுத்த வேண்டும் என முடிவெடுத்தனர்.மேலும் பள்ளியை தத்தெடுத்து மேம்படுத்த முடிவெடுத்துள்ளனர். அதற்காக  முதல் கட்டமாக ரூ. 2 லட்சம் மதிப்பில் சேதமடைந்த வகுப்பறைக் கட்டிடங்களைச் சீரமைக்க முடிவு செய்தனர். இந்நிலையில், சீரமைப்புப் பணிகள் முடிந்து புதுப்பிக்கட்ட கட்டிடங்களை ஒப்படைக்கும் பணி நேற்று நடைபெற்றது. இந்த சீரமைப்பு நிகழ்ச்சியின்  போது அப்பபள்ளியின் தலைமைஆசிரியர் கிறிஸ்டோபர் ஜெயசீலன் தலைமை தாங்கினார். மேலும்,  முன்னாள் மாணவர்கள் சங்கத் தலைவர் டாக்டர் அல்லாரைசல் மற்றும் முன்னாள் மாணவர்கள் வழக்கறிஞர் கண்ணன், முரளி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும் இந்த விழாவில், பெற்றோர் ஆசிரியர் சங்கத்தலைவர் மகேந்திரன், உதவிதலைமை ஆசிரியர் வாசிமலை, கல்விக்குழு தலைவர் செல்வராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர். ஆசிரியர்கள் சங்கரலிங்கம், மனோகரன் ஆகியோர் விழாவிற்கான ஏற்பாடுகளைs செய்தனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்