அரசு ஊழியர்கள் இரண்டாவது திருமணம் செய்தால் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்! உயர்நீதிமன்றம் உத்தரவு!
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
அரசு ஊழியர்கள் இரண்டாவது திருமணம் செய்து கொள்வது தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் தேன்மொழி என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இது குறித்து இன்று வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி, ‘ அரசு ஊழியர்கள் இரண்டாவது திருமணம் செய்வது நன்னடத்தை ஆகாது. இரண்டாவது திருமணம் செய்வது சட்டப்படி குற்றம். அவர்களின் மீது துறை ரீதியான நடவடிக்கையும், குற்றவியல் வழக்கும் பதியப்பட வேண்டும் எனவும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், ‘ ஓய்வூதியம் சம்பந்தமாக அரசு ஊழியர்கள் தங்கள் மனைவி பெயர் மற்றும் விவரங்களை தரும்போது அது சரியான தகவல்தானா என்பதை சரிபார்க்கவேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டது.