தமிழக அரசு அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு ரூ.130 கோடி நிதியுதவி ஒதுக்கி அரசாணை வெளியிட்டுள்ளது.
அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு ரூ.130 கோடி நிதியுதவி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 15 வாரியங்களில் உள்ள 13 லட்சத்து 1,277 அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு தலா ரூ.1,000 நிவாரணம் மீண்டும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் கடந்த ஏப்ரல் 14 ஆம் முடிவடைய இருந்த ஊரடங்கு, இந்த மாதம் 30 வரை நீடிக்கப்படுவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார்.
இதையடுத்து நேற்று முன்தினம் காணொளிக்காட்சி மூலம் பேசிய பிரதமர் மோடி கொரோன வைரஸ் தீவிரமடைந்து வருவதால் ஊரடங்கை நாடு முழுவதும் மே 3 ஆம் தேதி வரை நீடிப்பதாக தெரிவித்திருந்தார். மேலும் ஏப்ரல் 20 க்கு பிறகு ஊரடங்கில் நிபந்தனைகளுடன் சில தளர்வுகள் இருக்கும் என்று குறிப்பிட்டிருந்தார். அதன்படி புதிய வழிகாட்டி நெறிமுறைகள் வெளியிடப்பட்ட்து. இந்த நிலையில் தமிழகத்தில் ஊரடங்கு நீடிப்பால் அமைப்புசாரா தொழிலார்களுக்கு ஏற்கனவே ரூ.1000 நிவாரணம் வழங்கப்பட்ட நிலையில், மீண்டும் ரூ.1000 வழங்கப்படும் என்று முதல்வர் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே நடந்த போர் என்பது பெரிய பதற்றத்தை ஏற்படுத்தி இது எங்கு வரைபோக…
டெல்லி : மத்தியப் பிரதேச பழங்குடி அமைச்சர் குன்வர் விஜய் ஷா, கர்னல் சோபியா குரேஷியை 'பயங்கரவாதிகளின் சகோதரி' என்று…
சென்னை : 10ஆம் வகுப்பு (SSLC) பொதுத் தேர்வுகள் மார்ச் 28 முதல் ஏப்ரல் 15, 2025 வரை நடைபெற்றன. இந்த…
டெல்லி : உச்சநீதிமன்றத்தின் 52-வது தலைமை நீதிபதியாக பி.ஆர். கவாய் இன்று பதவியேற்றார். அவருக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு…
சென்னை : 2025 ஆம் ஆண்டு +2 (12ஆம் வகுப்பு) பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கும், தனியாக தேர்வு எழுதியவர்களுக்கும்…
வாஷிங்டன் : காஸ்மீர் விவகாரத்தில் இந்தியா vs பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி அதன்பிறகு பேச்சுவார்த்தை மூலம் போர் நிறுத்தம்…