ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினம், சுதந்திர தினம் அன்று மாலை ஆளுநர் மாளிகையில் தேநீர் விருந்து வழக்கமாக வழங்கப்படும். இந்த தேநீர் விருந்தில் முதல்வர், அமைச்சர்கள், எம்.பி-க்கள், எம்.எல்.ஏ-க்கள் மற்றும் நீதிபதிகள், ஐஏஎஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகள் என பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்வார்கள்.
இந்நிலையில், குடியரசு தினத்தன்று ஆளுநர் மாளிகையில் நடைபெறும் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக காங்கிரஸ், கம்யூனிஸ்ட் மற்றும் விசிக அறிவித்துள்ளது. ஆளுநரின் செயல்பாட்டிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் இந்த முடிவை எடுத்துள்ளனர்.
தொகுதி பங்கீடு… திமுக காங்கிரஸ் இடையே பேச்சுவார்த்தை..!
இது தொடர்பாக பேசிய காங்கிரஸ் எம்.எல்.ஏ. செல்வப்பெருந்தகை “ஆளுநரை நாங்கள் புறக்கணிக்கவில்லை, ஆளுநரின் நடவடிக்கை தான் புறக்கணிக்கிறோம். அரசியலமைப்பின் சட்டத்தின் கீழ் இயங்கும் ஆளுநர் அரசியலமைப்பின் சட்டத்தை சிதைக்கிறார். வரலாற்றை சிதைக்கும் வகையில் ஆளுநர் பேசி வருகிறார்” என கூறினார்.
நேற்று அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள விவேகானந்தர் அரங்கில் நேதாஜியின் பிறந்தநாள் விழாவானது நடைபெற்றது. இந்த விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்துகொண்டு பேசினார். அப்போது” நேதாஜி சுபாஷ் சத்திர போஸ் இல்லையென்றால் 1947ஆம் ஆண்டில் இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்திருக்காது. 1942ஆம் ஆண்டுக்கு பின்னர் மகாத்மா காந்தியின் போராட்டங்கள் பலனளிக்கவில்லை” என தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…