suvenkadesan [Imagesource : TheNewIndianExpress]
சங்கரய்யாவிற்கு அவர்களுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்க ஆளுநர் ஒப்புதல் அளிக்காத நிலையில், ஆளுநரின் இந்த செயலுக்கு கண்டனங்கள் வழுத்து நிலையில், உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அவர்கள், சங்கரய்யாவிற்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்க ஆளுநர் ஒப்புதல் அளிக்காததை கண்டித்து, இன்று மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ள போவதில்லை என அறிவித்துள்ளார்.
இந்த நிலையில், மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழா நடைபெற உள்ளது. இந்த பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்கள் கலந்து கொள்கிறார். சங்கரய்யாவிற்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்க ஆளுநரை கண்டித்து போராட்டம் நடைபெறும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்திருந்தது.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு உணவு உதவித்தொகை அதிகரிப்பு.! அரசாணை வெளியீடு.!
அதன்படி, ஆளுநரின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்தவர்கள் கருப்பு கொடி காட்டி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனை தடுக்க முயன்ற போலீஸ்காரர்கள் மற்றும் போராட்டக்காரர்கள் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் 100-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் சு.வெங்கடேசன் எம்.பி அவர்கள் தனது எக்ஸ் தள பக்கத்தில், ‘விடுதலை போராட்ட வீரர் தோழர் சங்கரய்யாவுக்கு கெளரவ டாக்டர் பட்டம் வழங்குவது என்று மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் எடுத்த முடிவை ஏற்க மறுத்த ஆளுநரின் நடவடிக்கை என்பது அநாகரிகத்தின் உச்சம். விடுதலைப் போராட்ட வீரர்களை நினைவுப்படுத்துவதோ, கெளரவப்படுத்துவதோ இவர்களுக்கு உடன்பாடல்ல.
பாராளுமன்றத்தில் மோடி எதை செய்தாரோ அதைத்தான் பல்கலைக் கழகத்தில் இரவி செய்கிறார். தேச விடுதலையை காட்டிக்கொடுத்தவர்கள், அந்த வீர வரலாற்றை கண்டு நடுங்கத்தான் செய்வார்கள் என விமர்சித்துள்ளார்.
சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…
சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…
பஞ்சாப் : இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…
பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…