ஆளுநரின் விவகாரம் தொடர்பாக டெல்லியில் குடியரசுத் தலைவருடன் தமிழக அரசின் பிரதிநிதிகள் சந்தித்து பேசி வருகின்றனர்.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னதாக சட்டப்பேரவையில் ஆளுநர் ஆர்.என்.ரவி, ஆளுநர் உரையின் போது, உரையில் இருந்த தமிழ்நாடு, திராவிட மாடல் உள்ளிட்ட சில வார்த்தைகளை தவிர்த்து வாசித்தார். இதனை தொடர்ந்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆளுநர் குறித்து பேசும் போது, ஆளுநர் சட்டப்பேரவையில் இருந்து பாதியிலேயே வெளியேறினார்.
ஆளுநரின் செயலுக்கு அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில், பொங்கல் அழைப்பிதழிலும் தமிழ்நாடு என்ற வார்த்தைக்கு பதிலாக தமிழக ஆளுநர் என அச்சிடப்பட்டிருந்தது. இதற்கும் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், ஆளுநரின் விவகாரம் தொடர்பாக டெல்லியில் குடியரசுத் தலைவருடன் தமிழக அரசின் பிரதிநிதிகள் சந்தித்து பேசி வருகின்றனர். எம்.பி டி.ஆர்.பாலு, சட்ட அமைச்சர் ரகுபதி ஆகியோர் குடியரசுத் தலைவரை சந்தித்துள்ளனர்.
சென்னை : சட்டவிரோத பணபரிவத்தனை வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்ப்பட்டிருந்த செந்தில் பாலாஜிக்கு இன்று உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. இதனை…
சென்னை : நடைபெறப்போகும் ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலத்தை நடத்துவதற்கு பிசிசிஐ தற்போது தயாராகி வருகிறது. இந்த நிலையில் ஒரு…
சென்னை : சட்டவிரோத பணபரிவத்தனை வழக்கில் அமலாக்கத்துறையால் கைதாகியிருந்த செந்தில் பாலாஜிக்கு இன்று உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. பின்னர் அந்த…
சென்னை : 471 நாட்கள் புழல் சிறையில் இருந்த செந்தில் பாலாஜிக்கு இன்று உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. சட்டவிரோத பணப்பரிவர்த்தனை…
சென்னை : விக்கிரவாண்டியில் அக். 27ம் தேதி நடைபெற உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டுக்கு விழுப்புரம் மாவட்ட…
சென்னை : பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள, ஒரு சில பிரபலங்கள் விரும்பினாலும், ஒரு சில பிரபலங்கள் அதனை அலர்ஜியாகவே…