ஆளுநர் விவகாரம் – ஜனாதிபதியை சந்தித்த தமிழக அரசின் பிரதிநிதிகள்..!

Default Image

ஆளுநரின் விவகாரம் தொடர்பாக டெல்லியில் குடியரசுத்  தலைவருடன் தமிழக அரசின் பிரதிநிதிகள் சந்தித்து பேசி வருகின்றனர்.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னதாக சட்டப்பேரவையில் ஆளுநர் ஆர்.என்.ரவி, ஆளுநர் உரையின் போது, உரையில் இருந்த தமிழ்நாடு, திராவிட மாடல் உள்ளிட்ட சில வார்த்தைகளை தவிர்த்து வாசித்தார். இதனை தொடர்ந்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆளுநர் குறித்து பேசும் போது, ஆளுநர் சட்டப்பேரவையில் இருந்து பாதியிலேயே வெளியேறினார்.

ஆளுநரின் செயலுக்கு அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில், பொங்கல் அழைப்பிதழிலும் தமிழ்நாடு என்ற வார்த்தைக்கு பதிலாக தமிழக ஆளுநர் என அச்சிடப்பட்டிருந்தது. இதற்கும் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், ஆளுநரின் விவகாரம் தொடர்பாக டெல்லியில் குடியரசுத்  தலைவருடன் தமிழக அரசின் பிரதிநிதிகள் சந்தித்து பேசி வருகின்றனர். எம்.பி டி.ஆர்.பாலு, சட்ட அமைச்சர் ரகுபதி ஆகியோர் குடியரசுத் தலைவரை சந்தித்துள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்