எம்.பி டி.ஆர்.பாலு, ஆளுநர் அவை மரபுகளை மீறியது தொடர்பாக குடியரசுத் தலைவரிடம் விளக்கினோம் என எம்.பி டி.ஆர்.பாலு பேட்டி.
சட்டப்பேரவையில் ஆளுநர் ஆர்.என்.ரவி, ஆளுநர் உரையின் போது, உரையில் இருந்த தமிழ்நாடு, திராவிட மாடல் உள்ளிட்ட சில வார்த்தைகளை தவிர்த்து வாசித்தார். இதனை தொடர்ந்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆளுநர் குறித்து பேசும் போது, ஆளுநர் சட்டப்பேரவையில் இருந்து பாதியிலேயே வெளியேறினார்.
ஆளுநரின் செயலுக்கு அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில்,ஆளுநரின் விவகாரம் தொடர்பாக டெல்லியில் குடியரசுத் தலைவருடன் தமிழக அரசின் பிரதிநிதிகள் சந்தித்து பேசி வருகின்றனர். எம்.பி டி.ஆர்.பாலு, சட்ட அமைச்சர் ரகுபதி ஆகியோர் குடியரசுத் தலைவரை சந்தித்துள்ளனர்.
அதனை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த எம்.பி டி.ஆர்.பாலு, ஆளுநர் அவை மரபுகளை மீறியது தொடர்பாக குடியரசுத் தலைவரிடம் விளக்கினோம். முறையீடு குறித்து பரிசளிப்பதாக குடியரசுத் தலைவர் கூறினார் என தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் பேசுகையில் ஆளுநர் தேசிய கீதத்தை இழிவுபடுத்தி உள்ளார். ஆளுநரைப் பொருத்தவரையில் ஆர்.எஸ்.எஸ் இன் கொள்கைகளை திணிப்பது தான் அவரது நோக்கம். ஆளுநரின் விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் எழுப்புவோம் என தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா : இப்போது WWE -யில் பரபரப்பாக ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கும் போட்டி என்றால் ட்ரூ மெக்கின்டைர் மற்றும் சிஎம்…
சென்னை : இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டியின் முதல் நாள் போதிய வெளிச்சம் இல்லாத காரணத்தால்…
நாமக்கல் : கேரளாவில் ATM-களில் கொள்ளையடித்த கொள்ளைக்கும்பல் தப்பி வந்த கண்டெய்னர் லாரி நாமக்கல் - பச்சாபாளையம் அருகே பிடிபட்டது. பச்சாபாளையம்…
சென்னை : பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்க போகிறது என்றாலே அதில் கலந்துகொள்ளவுள்ளதாக, பல பிரபலங்களுடைய பெயர் அடிபடும். அப்படி…
சென்னை -கல்யாண வீட்டு ஸ்டைல்ல சாம்பார் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் தெரிந்து கொள்வோம் . தேவையான…
டெல்லி : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2 நாள் பயணமாக டெல்லி சென்றுள்ளார். இன்று காலை பிரதமர் மோடியை பிரதமர்…