நீட் விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் தர ஆளுநர் கால நிர்ணயம் சொல்ல மறுத்தது குறித்து முரசொலி நாளிதழ் விமர்சனம்.
தனக்கு இருக்கும் கடமையை சரியாக செய்யாமல் அவசியமற்ற அரசியல் செய்கிறார் தமிழக ஆளுநர் என்று முரசொலி நாளிதழில் கடும் விமர்சனம் செய்யப்பட்டுள்ளது. அதில், பாஜகவுக்கு தமிழ்நாட்டில் இருக்கும் ஒன்றரையணா வோட்டுக்கும் உலை வைக்க ஆளுநர் ரவி முடிவெடுத்துவிட்டதாகவே தெரிகிறது. அவரது நடவடிக்கை அப்படித்தான் இருக்கிறது. ஆளுநர் தன்னை ஏதோ ஜனாதிபதியாக நினைத்துக் கொள்கிறாரோ?.
தமிழ்நாடு பாஜகவின் தலைமை பொறுப்பை தானே கவனிக்கலாம் என நினைத்துவிட்டாரா ஆளுநர் என தெரியவில்லை. தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பிய நீட் விலக்கு மசோதாவை ஜனாதிபதிக்கு அனுப்புவது ஆளுநரின் கடமை. ஜனாதிபதிக்கு மசோதாவை அனுப்பாமல் ஊறுகாய் பானையில் ஊற வைப்பது ஆளுநர் வேலை அல்ல. யாரோ சிலரால் தவறாக வழிநடத்தப்படுகிறார் தமிழ்நாடு ஆளுநர் என்பது தெளிவாக தெரிகிறது.
ஆளுநருடன் இணக்கமான உறவையே தமிழக அரசு விரும்புகிறது. ஆனால், ஆளுநரின் போக்கு அதை விரும்புவதாக இல்லை. தாமதிக்கப்படும் நீதி என்பது மறுக்கப்பட்ட நீதி ஆகும். அதைப்புரிந்தும், தெளிந்தும் ஆளுநர் செயல்பட வேண்டும் என அரசின் மசோதாக்களை கிடப்பில் போட்டுள்ள ஆளுநர் ஆர்.என்.ரவி குறித்து முரசொலி கடும் விமர்சனம் செய்துள்ளது. முரசொலி நாளிதழின் நிறுவனர் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி என்பதாகும்.
சேலம் : தமிழ் சினிமாவின் இந்த காலகட்டத்தில் வெளியாகும் ஒரு காதல் படமாக இருக்கட்டும், ஆக்ஷன் படமாக இருக்கட்டும் ஹீரோ…
டெல்லி : தேசிய கல்விக் கொள்கையில் ஹிந்தி திணிக்கப்படுவதாக தமிழ்நாடு எதிர்ப்பு தெரிவித்து வருவது நாடு முழுக்கப் பேசுபொருளாகியுள்ளது. தமிழ்நாட்டுக்கு…
டெல்லி : மக்கள் தொகை அடிப்படையில் மக்களவை தொகுதி மறுசீரமைப்பு என்பது இறுதியாக 1971-ல் நடைபெற்றது. அதற்கு பிறகு 2026-ல்…
துபாய் : 2025 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டி வரும் மார்ச் 9-ஆம் தேதி துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெறவுள்ளது.…
சென்னை : இயக்குநர் சுந்தர் சி இயக்கத்தில் அரண்மனை 4 திரைப்படம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று உலகம் முழுவதும்…
துபாய் : இந்திய கிரிக்கெட் அணி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றுள்ள நிலையில், வரும் மார்ச் 9-ஆம் தேதி துபாய்…