நீட் விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் தர ஆளுநர் கால நிர்ணயம் சொல்ல மறுத்தது குறித்து முரசொலி நாளிதழ் விமர்சனம்.
தனக்கு இருக்கும் கடமையை சரியாக செய்யாமல் அவசியமற்ற அரசியல் செய்கிறார் தமிழக ஆளுநர் என்று முரசொலி நாளிதழில் கடும் விமர்சனம் செய்யப்பட்டுள்ளது. அதில், பாஜகவுக்கு தமிழ்நாட்டில் இருக்கும் ஒன்றரையணா வோட்டுக்கும் உலை வைக்க ஆளுநர் ரவி முடிவெடுத்துவிட்டதாகவே தெரிகிறது. அவரது நடவடிக்கை அப்படித்தான் இருக்கிறது. ஆளுநர் தன்னை ஏதோ ஜனாதிபதியாக நினைத்துக் கொள்கிறாரோ?.
தமிழ்நாடு பாஜகவின் தலைமை பொறுப்பை தானே கவனிக்கலாம் என நினைத்துவிட்டாரா ஆளுநர் என தெரியவில்லை. தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பிய நீட் விலக்கு மசோதாவை ஜனாதிபதிக்கு அனுப்புவது ஆளுநரின் கடமை. ஜனாதிபதிக்கு மசோதாவை அனுப்பாமல் ஊறுகாய் பானையில் ஊற வைப்பது ஆளுநர் வேலை அல்ல. யாரோ சிலரால் தவறாக வழிநடத்தப்படுகிறார் தமிழ்நாடு ஆளுநர் என்பது தெளிவாக தெரிகிறது.
ஆளுநருடன் இணக்கமான உறவையே தமிழக அரசு விரும்புகிறது. ஆனால், ஆளுநரின் போக்கு அதை விரும்புவதாக இல்லை. தாமதிக்கப்படும் நீதி என்பது மறுக்கப்பட்ட நீதி ஆகும். அதைப்புரிந்தும், தெளிந்தும் ஆளுநர் செயல்பட வேண்டும் என அரசின் மசோதாக்களை கிடப்பில் போட்டுள்ள ஆளுநர் ஆர்.என்.ரவி குறித்து முரசொலி கடும் விமர்சனம் செய்துள்ளது. முரசொலி நாளிதழின் நிறுவனர் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி என்பதாகும்.
ஆத்தி மரத்தின் சிறப்புகளையும் அதன் ஆரோக்கிய நன்மைகளையும் இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். சென்னை : ஆத்தி மரத்தை இடிதாங்கி…
சென்னை : நாளை (டிசம்பர் 20) வெற்றிமாறன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, சூரி நடித்துள்ள விடுதலை படத்தின் 2ஆம் பாகம்…
சென்னை : காலகலப்பு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் நடிகர் கோதண்டராமன். இவர் கடந்த சில நாட்களாகவே உடல் நிலை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகமே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இயங்கி வருகிறது. ஒருபக்கம், அம்பேத்கரை அமித்ஷா அவமதித்துவிட்டார் என காங்கிரஸ்…
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன அதன் பலன்கள் மற்றும் சிறப்புகளை இந்த செய்து குறிப்பில் காணலாம் . சென்னை :சிவபெருமானுக்கு…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் மற்றும் பாஜக எம்பிக்கள் தனி தனியாக ஆர்ப்பாட்டத்தில்…