உச்சநீதிமன்றத்தால் முதலமைச்சர்- ஆளுநர் சந்திப்பு..!

தமிழக அரசு தமிழக சட்டசபையில் நிறைவேற்றிய மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளிக்கமால் கிடப்பில் போடுவதாக திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் குற்றம்சாட்டியது. இதைத்தொடர்ந்து, தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு ஓன்று தொடரப்பட்டது.

அதில், தமிழக அரசு தமிழக சட்டசபையில் நிறைவேற்றிய மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் நிலுவையில் வைத்துள்ளார். அதனால் நிலுவையில் உள்ள மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்க கால அவகாசம் வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. இந்த மனு விசாரணை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வில் நடைபெற்றது.

2,310 பேருந்துகள்.. நவீன வசதிகள்… கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்… முதல்வர் மு.க.ஸ்டாலின் திறப்பு.!

விசாரணையின்போது, ஆர்என் ரவி செயல்பாடுகளுக்கு உச்சநீதிமன்றம் அதிருப்தி தெரிவித்தது. மேலும், ஒருமுறை மசோதா திருப்பி அனுப்பினால் மறுமுறை மசோதா நிறைவேற்றி வரும்போது ஒப்புதல் அளிக்க வேண்டும்.எனவே மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பது தொடர்பாக முதல்வருடன், ஆளுநரும் பேச்சுவார்த்தை நடத்தி வேண்டும் என  தலைமை நீதிபதி அமர்வில் தெரிவித்தது.

இந்நிலையில், இன்று மாலை 5.30 மணிக்கு கிண்டியில் உள்ள ராஜ்பவனில் ஆளுநர் ஆர்.என்.ரவியை  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திக்கிறார். நிலுவை உள்ள மசோதாக்கள் தொடர்பாக முதலமைச்சரை சந்தித்து பேச ஆளுநருக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்திய நிலையில் முதலமைச்சருக்கு ஆளுநர் ரவி அழைப்பு விடுத்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tamil live news
Ilayaraja Biopic
mp sudha anbumani
Jayalalithaa and pm modi
nzvsban
vidaamuyarchi ott release date
kaliyammal tvk