[Image source : ABP Nadu]
தனக்கு சிறு வயதில் குழந்தை திருமணம் நடைபெற்றதாக மாணவர்கள் மத்தியில் ஆளுநர் ரவி பேசியுள்ளார்.
பீகார் மாநில மாணவர்களுடன் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் கலந்துரையாடினார். அப்போது பேசிய ஆளுநர், உலகில் மிகவும் பழமையான மொழிகளில் சமஸ்கிருதமும், தமிழும் இருக்கிறது என்றார் . மேலும், தமிழில் இருந்து சில வார்த்தைகள் சமஸ்கிருதத்திலும், சமஸ்கிருதத்தில் உள்ள வார்த்தைகள் தமிழிலும் இருக்கின்றன என்றும் அவர் குறிப்பிட்டார். மேலும் கூறுகையில் , இதில் எந்த மொழி பழமையான மொழி என்ற விவாதம் நீண்ட வருடங்களாக நடந்து வருவதாகவும் ஆளுநர் குறிப்பிட்டார்.
அடுத்ததாக , தமிழகத்தில் எந்த இடம் பிடிக்கும் என்றால் அதை என்னால் கூற முடியாது என்றும், உடலில் உள்ள மொத்த பாகங்களில் எந்த பாகம் பிடிக்கும் என்று கேட்டால் கூற முடியாதோ அது போல, தமிழ்நாட்டில் எந்த இடம் பிடிக்கும் என்பதற்கு என்னால் பதில் கூற முடியாது எனக்கு ஆளுனர் பேசினார்.
தனது சிறு வயது வாழ்வு பற்றி மனம் திறந்த ஆளுநர் ரவி, எனக்கு சிறுவயதிலேயே குழந்தை திருமணம் நடைபெற்றது எனவும், இருவரும் திருமணத்திற்கு பிறகு ஒன்றாக சேர்ந்து வளர்ந்தோம் என்றும் குறிப்பிட்டார். மேலும், தனது மனைவி கல்லூரிக்கு செல்லவில்லை என்றும், இருந்தாலும் அவர் எனக்கு மிகவும் உறுதுணையாக இருந்து வருகிறார் என்றும் ஆளுநர் ரவி குறிப்பிட்டு பேசினார்.
சென்னை : சூர்யா, கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் உருவாகியிருக்கும் 'ரெட்ரோ' படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டிருக்கிறது. இரண்டு மாதங்களுக்கு முன்பு…
பெங்களூரு : பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் பெங்களூர் - பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று நடைபெறவிருக்கிறது. இரு அணிகளும்…
டெல்லி : செல்போன் கட்டணத்தை கடந்தாண்டு ஜியோ, ஏர்டெல், வோடாபோன் ஐடியா ஆகியவை உயர்த்தின. பிஎஸ்என்எல் மட்டும் உயர்த்தவில்லை. இந்நிலையில்,…
சென்னை : NDA கூட்டணிக்கு நாதக-வை, நயினார் நாகேந்திரன் அழைத்திருந்த நிலையில், அதற்கு சீமான் நன்றி தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று…
சென்னை : நடிகர் அர்ஜுனின் இளைய மகள் அஞ்சனா கடந்த 2023-ஆம் ஆண்டு ஹேண்ட் பேக் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றை…
சென்னை : தென்னாப்பிரிக்காவின் இளம் அதிரடி வீரரான டிவால்ட் பிரேவிஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இணைந்துள்ளார். சென்னை சூப்பர்…