ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவுக்கு கூடுதல் விளக்கம் வேண்டும் என கூறி தமிழக அரசிடம் ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பியுள்ளார்.
ஆன்லைன் சூதாட்டத்தால் பலர் தங்கள் பணத்தை இழந்து மன உளைச்சல் தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொள்வது அவ்வப்போது நடந்து வருகிறது. இதனை தடுக்க ஆன்லைன் சூதாட்டத்திற்கு நிரந்ததர தடை விதிக்க தமிழக அரசு கடந்த அக்டோபர் மாதம் சட்டப்பேரவையில் சட்ட மசோதாவை இயற்றியது.
இதற்கு ஒப்புதல் வழங்குவதற்காக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அப்போது அவர் அதற்கு விளக்கம் கேட்டிருந்தார். அதன் பிறகு, தமிழக அரசு சார்பில் விளக்கம் அளித்து திருப்பி ஆளுநர் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில், 4 மாதங்கள் கடந்தும், இன்னும் ஆளுநர் ஆர்.என்.ரவி, ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவுக்கு ஒப்புதல் வழங்காமல் நேற்று மீண்டும் கூடுதல் விளக்கம் கேட்டு மசோதாவை திருப்பி அனுப்பியுள்ளார் தமிழக ஆளுனர் ஆர்.என்.ரவி.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…