செந்தில் பாலாஜி அமைச்சராக தொடரக்கூடாது என சொல்வதற்கு ஆளுநருக்கு அதிகாரம் கிடையாது என ஆர்.எஸ்.பாரதி கூறியுள்ளார்.
தமிழக அமைச்சரவையில் இலாகா மாற்றுவதற்கும், செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக தொடர்வதற்கும் முதலமைச்சர் ஸ்டாலின் ஆளுநருக்கு நேற்று பரிந்துரை செய்திருந்தார். இதற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி இன்றும் இரண்டாவது முறையாக பரிந்துரையை ஏற்க மறுத்துள்ளார். கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜி மீது குற்றவியல் வழக்கு இருப்பதால் அமைச்சராக தொடர முடியாது என கூறி பரிந்துரையை மறுத்துள்ளார்.
மேலும் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு மற்றும் முத்துசாமிக்கு கூடுதல் துறை ஒதுக்கீடு செய்யும் பரிந்துரைக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்கியிருக்கிறார். இதையடுத்து திமுக அமைப்புச்செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, அமைச்சராக செந்தில் பாலாஜி தொடரக்கூடாது என சொல்ல அதிகாரம் கிடையாது.
திமுக சட்ட ரீதியில் இதனை சந்திக்கும் என தெரிவித்த ஆர்.எஸ்.பாரதி, ஆளுநர் தனது அதிகாரத்தை மீறி நடந்துகொண்டால் நீதிமன்றம் மூலம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை வழக்கறிஞர் என்ற முறையில் தெரிவித்துக்கொள்வதாகவும், ஆளுநர் போல் நடந்துகொள்ளாமல் பாஜகவின் மாநில தலைவர் போல் நடந்து கொள்வதாகவும் ஆர்.எஸ்.பாரதி மேலும் கூறினார்.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…