திமுக தலைவரை ஆளுநர் அழைத்துப் பேசியதே திமுகவிற்கு கிடைத்த வெற்றி தான்-உதயநிதி ஸ்டாலின்

Default Image

திமுகவின் இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டம் தொடர்பாக திமுக தலைவரை ஆளுநர் அழைத்துப் பேசியதே திமுகவிற்கு கிடைத்த வெற்றி தான் என்று இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

கரூர் மாவட்ட தி.மு.க இளைஞரணி சார்பில் நடைபெற்ற  தாந்தோனி ஒன்றியம், வெள்ளியனை- ஜெகதாபி ஊராட்சிகளின் இடையிலுள்ள சொட்டை குளம் தூர்வாரும் பணியை இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பார்வையிட்டார்.

இதன் பின்னர்   உதயநிதி ஸ்டாலின்  செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் பேசுகையில், இளைஞர் அணி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திபடி தி.மு.க இளைஞர் அணியினரால் இந்த குளம் தூர்வாரப்பட்டுள்ளது.

திமுகவின் இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டம் தொடர்பாக திமுக தலைவரை ஆளுநர் அழைத்துப் பேசியதே திமுகவிற்கு கிடைத்த வெற்றி தான் .எங்களது போராட்ட அறிவிப்பிற்கு மத்திய அரசு பயந்துவிட்டது, ஸ்டாலின் பின் வாங்கவில்லை, ஆளுநர் அழைத்து பேசியதால் தான் போராட்டம் கைவிடப்பட்டது என்று தெரிவித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்