முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பாராட்டு!

Default Image

தமிழ்நாட்டில் கொரோனா இரண்டாவது அலைக்கு எதிராக அயராது உழைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டு தெரிவித்த ஆளுநர்.

நாட்டின் 75-ஆவது சுதந்திர தினத்தையொட்டி கிண்டி ராஜ்பவனில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், எம்பிக்கள், எம்ஏக்கள் உள்ளிட்டோருக்கு தேநீர் விருந்து அளித்தார். இதில், பாஜக, காங்கிரஸ் கட்சிகளின் சட்டமன்ற குழு தலைவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர்.

இந்த நிலையில், தமிழ்நாட்டில் கொரோனா இரண்டாவது அலைக்கு எதிராக அயராது உழைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அரசு அதிகாரிகள் மற்றும் முன்கள பணியாளர்களுக்கு வாழ்த்துக்கள் என்றும் மக்கள் தடுப்பூசி செலுத்திக்கொண்டு அரசுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்