நரிக்குறவ தம்பதிக்கு பாலூற்றி பாதபூஜை செய்த அரசு போக்குவரத்து ஊழியர்கள்..!

Published by
லீனா

சென்னையில் நரிக்குறவ தம்பதிக்கு பாலூற்றி பாதபூஜை செய்த அரசு போக்குவரத்து ஊழியர்கள். 

கடந்த சில நாட்களுக்கு முன்பதாக கன்னியாகுமரியில், நரிக்குறவர் இனத்தை சேர்ந்த குடும்பத்தை அரசு பேருந்து ஓட்டுனர் பேருந்தில் இருந்து இறங்கி விட்ட சம்பவம் சர்ச்சையான நிலையில், சென்னையை சேர்ந்த அரசு போக்குவரத்து பணியாளர்கள் நரிக்குறவர் தம்பதிக்கு பாலூற்றி பாதபூஜை செய்துள்ளனர்.

பாரிமுனை சென்ற நரிக்குறவர் சமூகத்தைச் சேர்ந்த தம்பதி பஸ் ஓட்டுனர் அப்துல் மன்னா, நடத்துனர் மோகன் ஆகியோரிடம், ‘பெரம்பூர் வீனஸ் செல்ல வேண்டும்’ எனக் கூற அவர்கள் அங்கிருந்து அவர்கள் செல்ல வேண்டிய பேருந்து இருக்கும் இடத்திற்கு அழைத்துச் சென்றனர்.

அங்கு அப்துல் மன்னா, மோகன் ஆகியோருடன், அவர்கள் செல்ல வேண்டிய  பஸ்சின் ஓட்டுனர் சதீஷ் பாபு, நடத்துனர் பூமணி ஆகியோர் சேர்ந்து நரிக்குறவர் தம்பதிக்கு காலில் பால் ஊற்றி, மஞ்சள், குங்குமம் வைத்து மாலை அணிவித்து தட்டில் கற்பூரம் ஏற்றி பூஜை செய்து அழைத்து சென்றனர்.

இதுகுறித்து மாநகர பஸ் ஊழியர்கள் கூறுகையில், சமீபகாலமாக பஸ் நடத்துனர் ஓட்டுனர் குறித்து மக்கள் மத்தியில் தவறான கண்ணோட்டம் உள்ளது. நாங்கள் அனைவரையும் மதிக்கிறோம். பயணிகளையும் சமமாக நடத்துகிறோம் என்பதை உணர்த்தவே இப்படி செய்தோம் என்று தெரிவித்துள்ளனர்.

Recent Posts

நீட் விலக்கு : “திமுக அரசு ஏன் உச்சநீதிமன்றம் போகல?”அண்ணாமலை சரமாரி கேள்வி!

நீட் விலக்கு : “திமுக அரசு ஏன் உச்சநீதிமன்றம் போகல?”அண்ணாமலை சரமாரி கேள்வி!

சென்னை : இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தலைமை செயலலகத்தில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆலோசனை…

2 hours ago

நான் ஏன் ஜெயலலிதாவை எதிர்த்தேன்? ரஜினிகாந்த் பரபரப்பு விளக்கம்!

சென்னை : நடிகர் ரஜினிகாந்த் - மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இடையிலான 1990-களில் ஏற்பட்ட உரசல்கள் பற்றி பல்வேறு…

3 hours ago

EMI செலுத்துவோர் கவனத்திற்கு.., ரெப்போ வட்டி விகிதத்தை குறைத்த RBI! எவ்வளவு தெரியுமா?

டெல்லி : ரிசர்வ் வங்கி (RBI) ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா இன்று ரெப்போ வட்டி விகிதம் குறித்த முக்கிய அறிவிப்பை…

4 hours ago

குமரி அனந்தன் உடலுக்கு அரசு மரியாதை! முதலமைச்சர் அறிவிப்பு!

சென்னை : காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற உறுப்பினருமான குமரி அனந்தன், இன்று அதிகாலை உயிரிழந்தார்.…

4 hours ago

காலம் கடந்துவிட்டது., சீன பொருட்கள் மீது 104% வரி! டிரம்ப் கடும் நடவடிக்கை!

வாஷிங்டன் : கடந்த மாதம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அமெரிக்காவின் பொருளாதாரத்தை கருத்தில் கொண்டு அமெரிக்கா பொருட்களுக்கு  மற்ற…

5 hours ago

சென்னையை துரத்தும் துரதிருஷ்டம்.! 180+ சேஸிங்கில் தொடர்ந்து கோட்டை விடும் சிஎஸ்கே.!

பஞ்சாப் : ஐபிஎல் தொடரில் நேற்றைய போட்டியில் பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை அணி போராடி தோல்வியடைந்தது, 18…

5 hours ago