தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கி சூட்டில் 13 உயிர்கள் உயிரிழந்ததால் கொதித்தெழுந்த மக்களை சமாதானம் செய்யவே ஸ்டெர்லைட் ஆலையை அரசு மூடியுள்ளது என்றும் ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கு அரசு கொள்கை முடிவு எடுத்துள்ளதற்கு எந்த வித ஆதாரமும் இல்லை என்று ஸ்டெர்லைட் நிர்வாகம் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்டெர்லைட் ஆலையை தமிழக அரசு மூடியுள்ள நிலையில் அது தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இன்று நடைபெற்ற விசாரணையில் இன்று ஆஜரான தமிழக அரசு வழக்கறிஞர் தூத்துக்குடியில் இருக்கும் தொழிற்சாலைகளில் அதிகம் மாசுகளை வெளியிடுவது ஸ்டெர்லைட் தொழிற்சாலை என்று கூறியுள்ளார். மேலும் ஸ்டெர்லைட் வந்த பின்னர் தான் அங்கு மாசுபாடு அதிகரித்துள்ளதாக தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தங்கள் ஆலையால் தூத்துக்குடியில் எவ்வித மாசும் இல்லை என்று சென்னை உயர் நீதி மன்றத்தில் ஸ்டெர்லைட் நிர்வாகம் சார்பில் விளக்கமனு ஓன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது. மேலும் ஸ்டெர்லைட் ஆலையால் எந்த மாசுபாடும் இல்லை என்று என்.ஐ.ஆர்.ஐ (NIRI ) அமைப்பு கடந்த 2011ம் ஆண்டு தெரிவித்துள்ளது. மேலும் ஆலை மூடிய பின் காற்று மாசு குறைந்ததற்கு எந்த வித ஆதாரமும் இல்லை என்றும் கூறியுள்ளனர். கடந்த 10 ஆண்டுகளில் தூத்துக்குடி மக்களின் நலனுக்காக ஸ்டெர்லைட் நிர்வாகம் 10 ஆண்டுகளில் 500 கோடி வரை செலவளித்துள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…