ஜார்கண்ட் மாநிலத்தை போல தமிழகத்திலும் நடவடிக்கை எடுக்க அரசு முன்வர வேண்டும் – ராமதாஸ்

Default Image

ஜார்கண்ட் மாநிலத்தை போல தமிழகத்திலும் நடவடிக்கை எடுக்க அரசு முன்வர வேண்டும்.

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தாலும், இந்த வைரஸ் பாதிப்பால் லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்து உள்ளனர்.

இந்நிலையில், மக்கள் வெளியே வரும் போது  கண்டிப்பாக முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டாலும், அதை மக்கள் அலட்சியமாக எடுத்துக் கொள்கின்றனர். இந்நிலையில், ஜார்கண்ட் மாநிலத்தில், முகக்கவசம் அணியவில்லை என்றால், ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ராமதாஸ் அவர்கள் தனது ட்வீட்டர் பக்கத்தில், கொரோனா வைரஸ் பரவலை தடுக்க ஜார்கண்ட் மாநிலத்தில் முகக்கவசம் அணியவில்லையென்றால் ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்படுகிறதஹு. அதேபோல், தமிழகத்திலும் பாதுகாப்பு விதிகள் பின்பற்றப்படுவதை உறுதி செய்ய கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள அரசு முன்வர வேண்டும்.’ என பதிவிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்