அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் 1,098 விரிவுரையாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு அக்டோபர் 28,29 & 30 தேதிகளில் நடைபெறும்.
இதுகுறித்து ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள செய்து குறிப்பில், அரசு பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர்கள் காலி பணியிடங்களுக்கு பணிதெரிவு சார்ந்து ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிக்கை 2019ம் ஆண்டு நவம்பர் 27ம் தேதி வெளியிடப்பட்டது. இணையவழி வாயிலாக விண்ணப்பத்தினை விண்ணப்பதாரர்கள் 22.1.2020 முதல் பதிவேற்றம் செய்திடலாம் என தெரிவிக்கப்பட்டது.
மேலும் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பத்தினை பதிவேற்றம் செய்ய 12.02.2020 மாலை 5 மணி வரை கால அவகாசம் வழங்கப்பட்டது. அதில் கணினி வழி தேர்வுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என கூறப்பட்டது.
இந்த நிலையில், அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் உள்ள 1,098 விரிவுரையாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு அக்டோபர் 28,29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் தேர்வுகள் நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.
இந்த தேதிகளில் பெருந்தொற்று சூழ்நிலை, தேர்வு மையங்களின் தயார் நிலை மற்றும் நிர்வாக வசதியினை பொறுத்து மாறுதலுக்கு உட்பட்டது எனவும் ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளது.
துபாய் : சாம்பியன்ஸ் டிராபி தொடரில், இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் விளையாடும் மேட்ச் வரும் 2-ம் தேதி துபாயில்…
சென்னை : நடிகை விஜயலட்சுமி பாலியல் வழக்கில் சீமான் ஆஜராகி விளக்கமளிக்க கூடுதல் அவகாசம் தேவை என காவல்துறையிடம் கேட்க…
காத்மாண்டு : நேபாளத்தின் காத்மாண்டு அருகே இன்று அதிகாலை 6.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இருப்பினும், இந்த நிலநடுக்கத்தால்…
சென்னை : முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 72 வது பிறந்தநாள் நாளை கொண்டாடப்பட உள்ளது. இவரது பிறந்தநாளை முன்னிட்டு, திமுக தொண்டர்கள்…
சென்னை : சீமான் வீட்டில் போலீசாரை தாக்கிய விவகாரம் தொடர்பாக கைது செய்யப்பட்ட சீமான் வீட்டு காவலாளிகள் அமல்ராஜ், சுபாகர்…
சென்னை : கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று கடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும், உள்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும்,…