தமிழக அரசின் ஏ. பி. ஜே. அப்துல்கலாம் விருது ஆனந்தம் இளைஞர் அறக்கட்டளை நிறுவனருக்கும், மாநில இளைஞர் விருதுகள் 3 பேருக்கும் முதல்வர் வழங்கினார்.
நாடு முழுவதும் கொண்டாடப்படும் 74வது சுதந்திர தினத்தையொட்டி, சென்னையில் உள்ள தலைமை செயலகமான கோட்டையில் உள்ள கொத்தளத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தேசிய கொடி ஏற்றினார். அதனையடுத்து இந்த விழாவில் கொரோனா தடுப்பு பணிகளில் சிறப்பாக செயல்பட்ட பல்வேறு துறைகளில் உள்ள முன்கள பணியாளர்களுக்கு சிறப்பு விருதுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்.
அந்த வகையில் டாக்டர் ஏ. பி. ஜே அப்துல்கலாம் பெயரிலான விருதினை ஆனந்தம் இளைஞர் அறக்கட்டளை நிறுவனரான க. செல்வகுமாருக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்களால் வழங்கப்பட்டது. அதனையடுத்து மாநில இளைஞர் விருதுகள் 3பேருக்கு முதல்வர் வழங்கினார். மதுரையை சேர்ந்த அருண்குமார், கடலூரை சேர்ந்த ராம்குமார் மற்றும் சென்னையை சேர்ந்த அம்பேத்கர் ஆகியோருக்கு மாநில இளைஞர் விருதினை எடப்பாடி பழனிசாமி அவர்கள் வழங்கி கௌரவித்தார்.
சென்னை : ஆபரணத் தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவில் இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.66,000-ஐ கடந்தது நகை…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் இன்று தமிழ்நாடு அரசு நிதிநிலை அறிக்கை 2025 – 2026 (பட்ஜெட் 2025)-ஐ…
சென்னை : ஜோ படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக ரியோ நடிக்கும் படங்களின் மீது எதிர்பார்ப்புகள் எழுந்த சூழலில் அவர்…
சென்னை : இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு 2025 2026 ஆம்…
சென்னை : பலரும் பார்த்து ரசித்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய கிரிக்கெட் அணி வெற்றிபெற்ற நிலையில், அடுத்ததாக கிரிக்கெட் ரசிகர்களுடைய…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் இன்று தமிழ்நாடு அரசு நிதிநிலை அறிக்கை 2025 - 2026 (பட்ஜெட் 2025)-ஐ…