தென்கொரியாவில் இருந்து 10 லட்சம் பிசிஆர் கருவிகள் வாங்க ஆர்டர் வழங்கப்பட்டுள்ளது என தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா பரிசோதனைக்காக மேலும் 10 லட்சம் பிசிஆர் கருவிகளை வாங்க தமிழக அரசு ஆர்டர் வழங்கப்பட்டுள்ளது. தென்கொரியாவில் இருந்து 10 லட்சம் பிசிஆர் கருவிகள் வாங்க ஆர்டர் வழங்கப்பட்டுள்ளது என தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகம் தெரிவித்துள்ளது. இதுவரை தமிழ்நாட்டில் இன்று மட்டும் 1 லட்சம் பிசிஆர் கருவிகள் வந்துள்ளன என்று தெரிவித்துள்ளது.
இதுவரை தமிழ்நாட்டில் மொத்தம் 3.2 லட்சம் பிசிஆர் பரிசோதனைக் கருவிகள் பயன்பாட்டில் உள்ளன என்றும் கூறியுள்ளது. இதனிடையே தமிழகத்தில் கொரோனா பரிசோதனை நாள் ஒன்றிற்கு 10,000 முதல் 13,000க்கு மேற்பட்ட பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் காரணமாக மேலும் 10 லட்சம் பிசிஆர் கருவிகளை வாங்க தமிழக அரசு ஆர்டர் செய்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 6009 ஆகவும், உயிரிழப்பின் எண்ணிக்கை 40 ஆகவும் உள்ளது. கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட 6009 பேரில் 1605 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்கள் என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும் கொரோனா பரிசோதனையை மேற்கொள்ள பிசிஆர் கருவிகளை பயன்படுத்துங்கள் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் அனைத்து மாநில அரசுகளுக்கும் தெரிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 23.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…