பத்திரப்பதிவு துறையில் கடந்த ஆட்சிக் காலத்தில் செய்யப்பட்ட முறைகேடுகள் குறித்து விசாரிக்க சிறப்பு குழு அமைப்பு.
கடந்த ஆட்சி காலங்களில் பத்திரப்பதிவு துறையில் நடந்த முறைகேடுகளை விசாரிக்க ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி தலைமையில் சிறப்பு புலனாய்வுக்குழு அமைத்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. ஒரு தலைவர், இரண்டு உறுப்பினர்களுடன் இந்த சிறப்பு புலனாய்வு குழு செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆள்மாறாட்டம், போலி ஆவணங்கள் மூலம் பத்திரப்பதிவு, நில மோசடி, வருவாய் இழப்பு, அரசு நில ஆக்கிரமிப்பு உள்ளிட்ட புகார்கள் குறித்து இக்குழு ஆய்வு செய்யும் என்றும் 3 ஆண்டுகளுக்கு செயல்படும் இக்குழு, ஒவ்வொரு 3 மாதங்களுக்கும் ஆய்வறிக்கையை அரசுக்கு அளிக்கும் எனவும் கூறியுள்ளது.
மேலும், வருங்காலங்களில் மோசடிகளை தவிர்க்க வழிமுறைகளையும் ஆய்வு செய்து இக்குழு, அரசுக்கு அளிக்கும். பத்திரப்பதிவு துறை தவறுகளால் பாதிக்கப்பட்ட மக்கள், சிறப்பு புலனாய்வு குழுவில் புகார் அளிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
மலேசியா : பிசிசிஐ 19 வயதுக்குட்பட்டோருக்கான மகளிர் டி20 உலகக் கோப்பையை இந்தியா வென்றுள்ளது. மலேசியாவின் கோலாலம்பூரில் உள்ள பியூமாஸ்…
சென்னை : நடிகை சமந்தா கடந்த சில நாட்களாக இயக்குனருடன் டேட்டிங் செய்து வருகிறார் என்று கிசுகிசுக்கப்பட்டு வந்தது. இப்போது…
மலேசியா : மலேசியாவில் இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்காவை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது.…
மலேசியா : ஐசிசி 19 வயதுக்குட்பட்ட மகளிர் டி20 உலகக் கோப்பை இறுதி போட்டியில் இந்திய அணியின் அபாரமான பந்து…
மும்பை : இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5வது (கடைசி) டி20 போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் இன்று…
சென்னை : வரும் பிப்ரவரி 5ஆம் தேதி புதன்கிழமை அன்று ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.…