ஸ்டெர்லைட் ஆலையை திறப்பதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியீடு ..!

Published by
murugan

ஆக்ஸிஜன் உற்பத்திக்காக ஸ்டெர்லைட் ஆலையை திறப்பதற்கான அரசாணையை தமிழக அரசு  வெளியிடப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா 2-ஆம் அலையால் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டுவரும் நிலையில், ஆக்சிஜனை தயாரித்து மக்களுக்கு இலவசமாக தர ஸ்டெர்லைட் ஆலையை இயக்க அனுமதி கேட்டு வேதாந்தா நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது.

ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி தொடர்பாக முதல்வர் பழனிசாமி தலைமையில் நடைபெற்ற அனைத்து கட்சி கூட்டத்தில் ஆக்சிஜன் உற்பத்திக்காக மட்டுமே ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்கலாம் ஒப்புதல் அளித்தனர்.

இதைத்தொடர்ந்து, ஆக்சிஜன் உற்பத்திக்கு மட்டுமே ஸ்டெர்லைட் ஆலை இயங்க  அனுமதி வழங்கப்படும் என்று உச்சநீதிமன்றம் கூறியது. இந்நிலையில், ஆக்ஸிஜன் உற்பத்திக்காக ஸ்டெர்லைட் ஆலையை திறப்பதற்கான அரசாணையை தமிழக அரசு  வெளியிடப்பட்டுள்ளது.

ஸ்டெர்லைட் ஆலையை கண்காணிக்க தூத்துக்குடி ஆட்சியர் தலைமையில் 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி ஆட்சியர், துணை ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட 6 பேர் குழுவில் இடம் பெற்றுள்ளன. ஸ்டெர்லைட் ஆலை செயல்பாடு குறித்து இரண்டு வாரத்திற்கு ஒரு முறை அறிக்கை தர தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தூத்துக்குடி ஆட்சியர் தலைமையில் கண்காணிப்பு குழு அறிக்கை தர உத்தரவு என அரசாணையில் வெளியிடப்பட்டுள்ளது.

 

Published by
murugan

Recent Posts

LSG vs DC : அதிரடி காட்டிய லக்னோ! இறுதியில் சுருட்டிய டெல்லி! இதுதான் டார்கெட்!

லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், அக்சர் படேல் தலைமையிலான…

2 hours ago

LSG vs DC : பதிலடி கொடுக்குமா லக்னோ? டாஸ் வென்ற டெல்லி பந்துவீச்சு தேர்வு!

லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், அக்சர் படேல் தலைமையிலான…

4 hours ago

பயங்கரவாதிகள் தாக்குதல் : உத்தரவிட்ட பிரதமர் மோடி! காஷ்மீர் விரையும் அமித்ஷா!

ஸ்ரீநகர் : இன்று பிற்பகல் 3 மணி அளவில் ஜம்மு காஷ்மீர் அனந்த்நாக் மாவட்டத்திற்கு சுற்றுலா சென்ற பயணிகள் மீது…

4 hours ago

J&K சுற்றுலா பயணிகள் மீது துப்பாக்கிச் சூடு.! ஒருவர் உயிரிழப்பு.., 10 பேர் படுகாயம்.!

பஹல்காம் : ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம், பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுற்றுலா பயணிகள் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள்…

4 hours ago

“எல்லோருக்கும் மிகப்பெரிய நன்றி!” அஜித் குமார் டீம் நெகிழ்ச்சி!

சென்னை : நடிகர் அஜித்குமார் சினிமா, நடிப்பை தாண்டி கார் பந்தயத்திலும் மிகுந்த ஆர்வத்துடன் பங்கேற்று வருகிறார். ஏற்கனவே அஜித்குமார்…

5 hours ago

இனி எல்லாமே வெற்றி தான்., பிளே ஆஃப் உறுதி? CSK சிஇஓ நம்பிக்கை!

சென்னை : இந்த வருட ஐபிஎல் சீசன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும், ரசிகர்களுக்கும் சோகமான சீசனாகவே அமைந்து வருகிறது.…

6 hours ago