அரசு மதுபானக்கடை ஊழியரை தாக்கிவிட்டு 5 லட்சம் வழிப்பறி செய்து சென்ற மர்ம நபர்கள்.
மதுரை மாவட்டத்திலுள்ள மேலூர் அருகே தும்பை பெட்டியில் அரசு மதுபான கடை இயங்கி வருகிறது. இங்கு பாண்டி என்பவர் விற்பனையாளராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் நேற்று இரவு விற்பனையை முடித்துவிட்டு 5 லட்சம் பணத்துடன் அதை வங்கியில் செலுத்துவதற்காக தனது சகோதரன் கண்ணனுடன் சத்தியபுரம் நான்கு வழி சாலையில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த 25 வயது மதிக்கத்தக்க இரண்டு மர்ம நபர்கள் பாண்டி மற்றும் கண்ணனை தாக்கிவிட்டு அவர்கள் வைத்திருந்த 5 லட்சம் பணத்தை பறித்து கொண்டு தப்பி ஓடியுள்ளனர். இந்த வழிப்பறி சம்பவம் குறித்து பாண்டி அளித்த புகாரின் பேரில் மேலூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து வழிப்பறியில் ஈடுபட்ட மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மும்பை : டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவின் நினைவாக வான்கடே மைதானத்தில்…
சென்னை : வெற்றிமாறனின் விடுதலை பாகம் 2 படத்தில் கடைசியாக நடித்த நடிகர் சூரி, அடுத்து இயக்குனர் பிரசாந்த் பாண்டியராஜின்…
சென்னை : சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள டிடி நெக்ஸ்ட் லெவல், சூரியின் மாமன், யோகிபாபுவின் ஜோரா கைய தட்டுங்க ஆகிய…
டெல்லி : இந்தியா-பாகிஸ்தான் மோதல் காரணமாக ஒரு வார காலம் ஐபிஎல் போட்டிகள் நிறுத்தப்பட்டிருந்த நிலையில், மே 17 முதல் மீண்டும்…
சென்னை : தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒருவளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் ஒருசில இடங்களிலும்,…
பெங்களூரு : இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம் காரணமாக பாதியில் நிறுத்தப்பட்ட 18-ஆவது ஐ.பி.எல் சீசன் ஒரு வார…