பல்கலைக்கழங்கள் மற்றும் கல்லூரிகளுக்கு ஆன்லைன் மூலம் தேர்வு நடத்த அரசாணை வெளியீடு!

Published by
Rebekal

கொரோனா காரணமாக பல்கலை மற்றும் கல்லூரிகள் அனைத்திற்கும் ஆன்லைன் மூலமாக தேர்வுகள் நடத்த வேண்டும் என உயர் கல்வித்துறை வெளியிட்டுள்ள அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் காரணமாக தற்போது மீண்டும் தமிழகத்தில் ஊரடங்கு கடுமையாக்கப்பட்டுள்ள நிலையில் பள்ளி, கல்லூரிகள் தொடர்ந்து இயங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே பள்ளி கல்லூரிகள் ஆன்லைன் மூலம் வகுப்புகளை நடத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் இதுகுறித்து உயர் கல்வி துறை அரசு அறிவிப்பு கொண்ட அரசாணை ஒன்றை வெளியிட்டுள்ளது.

உயர்கல்வித்துறை செயலாளர் அபூர்வா அவர்கள் வெளியிட்டுள்ள அரசாணை அறிக்கையில், உயர் கல்வித்துறையின் கீழ் இயங்க கூடிய அனைத்து கல்வி நிறுவனங்களும் கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் எனவும், அனைத்து பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் பணியாற்ற கூடிய ஆசிரியர்களும் தங்கள் வீட்டில் இருந்தபடியே மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்துவதற்கு அனுமதிக்க வேண்டுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அரசு பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் மற்றும் தனியார் உயர்கல்வி நிறுவனங்கள் அனைத்தும் ஆன்லைன் மூலமாக தேர்வுகளை நடத்த வேண்டுமெனவும், கல்வி தொடர்பான பயிற்சி நிறுவனங்களும் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களும் பயிற்சி வகுப்புகளை ஆன்லைன் மூலம் தான் நடத்த வேண்டும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Published by
Rebekal

Recent Posts

“சீமான் அண்ணன், போர்க்களத்தில் இருக்கும் ஒரு தளபதி!” அண்ணாமலை புகழாரம்! 

“சீமான் அண்ணன், போர்க்களத்தில் இருக்கும் ஒரு தளபதி!” அண்ணாமலை புகழாரம்!

சென்னை : இன்று செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற சொல் தமிழா சொல் எனும்…

24 minutes ago

அதிமுக தொண்டர்களுக்கு எடப்பாடி துரோகிதான்…அமைச்சர் ரகுபதி பதிலடி!

சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவை நிகழ்வில் கலந்து கொள்ள வந்த அதிமுக எம்எல்ஏக்கள், ‘ யார் அந்த தியாகி?’…

1 hour ago

“பாஜக மாநிலத் தலைவர் பணிகள் எனக்கு இருக்காது!” அண்ணாமலை மீண்டும் திட்டவட்டம்!

சென்னை : பாஜக மாநிலத் தலைவர் பொறுப்பில் உள்ள அண்ணாமலை இன்னும் ஒருசில தினங்களில் மாற்றப்படுகிறார். அவருக்கு பதிலாக புதிய…

2 hours ago

வீட்டு உபயோக கியாஸ் சிலிண்டர் விலை ரூ.50 உயர்வு..!

சென்னை : வீட்டில் சமையலுக்கு பயன்படுத்தும் எரிவாயு (கியாஸ்) சிலிண்டரின் விலையை மத்திய அரசு ரூ.50 உயர்த்தியுள்ளது. அதாவது, இதுவரை…

2 hours ago

MIvsRCB : பும்ரா பந்துவீச்சை சமாளிப்பாரா கிங் கோலி? இதுவரை இத்தனை முறை அவுட்டா?

மும்பை : இன்று நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் மும்பை வான்கடே…

2 hours ago

கலால் வரி மட்டும் தான் உயர்வு…”பெட்ரோல் & டீசல் ரேட் உயராது”..மத்திய அரசு விளக்கம்!

டெல்லி : மத்திய அரசு பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை உயர்த்தியுள்ளது என்ற செய்தி தலைப்பு செய்தியாக…

3 hours ago