அரசு மருத்துவமனையில் வசூல் வேட்டை..! கண்டுகொள்ளாத அரசு..!

Published by
Dinasuvadu desk

பிரசவத்திற்கு 2000, அறுவை சிகிச்சைக்கு 500 ரூபாய் என ஒவ்வொன்றுக்கும் தனித்தனியாக பட்டியலிட்டு தென்காசி அரசு மருத்துவமனை ஊழியர்கள் அடாவடியாக பணம் வசூலிப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

திருநெல்வேலி மாவட்டம் தென்காசியில் உள்ள மாவட்ட அரசு மருத்துவமனையில் சிவகிரி, செங்கோட்டை, மேக்கரை, ஆலங்குளம்  உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தினந்தோறும், இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் புறநோயாளியாக சிகிச்சை பெற்று செல்கின்றனர். தரமான சிகிச்சையில் குறைபாடில்லை என்ற கருத்துக்கு மத்தியில், லஞ்சம் தலைவிறித்தாடுவதாக புகார் எழுந்துள்ளது.

பணம் கொடுத்தால் மட்டுமே நோயாளிகள் கவனிக்கப்படுவார்கள் என்ற சூழலை மருத்துவமனை ஊழியர்கள் ஏற்படுத்தி வைத்திருப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

பிரசவம் நடந்தால் 2000 ரூபாய், அறுவை சிகிச்சைக்கு 500 ரூபாய், படுக்கையை மாற்றுவதற்கு 200 ரூபாய், பார்வையாளர்கள் வந்து செல்வதற்கு அவ்வபோது 50 ரூபாய் என மருத்துவமனை ஊழியர்கள் போட்டி போட்டுக்கொண்டு கட்டாய வசூலில் ஈடுபடுவதாக புலம்புகின்றனர். தனியார் மருத்துவமனைக்கு சென்றால் பணம் செலவாகும் எண்ணத்தில் அரசு மருத்துவமனையை நாடினால், பணியாளர்களோ பணம் கேட்டு படதாபாடு படுத்துவதாக கவலை தெரிவிக்கின்றனர். இதுபோன்ற சம்பவங்கள் சர்வ சாதாரணமாக நடப்பதாக தெரிவிக்கும் பொதுமக்கள், மருத்துவமனை நிர்வாகம் தனி கவனம் செலுத்தி கண்காணித்தால் மட்டுமே நிரந்தர தீர்வு கிடைக்கும் என்று ஏக்கத்துடன் கூறியுள்ளனர்.

Published by
Dinasuvadu desk

Recent Posts

IND vs NZ : ‘ஒரு கேப்டனாக வேதனை அடைந்தேன்’.. ரோஹித் சர்மா பேச்சு!

IND vs NZ : ‘ஒரு கேப்டனாக வேதனை அடைந்தேன்’.. ரோஹித் சர்மா பேச்சு!

பெங்களூர் : இந்தியா மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாளானது மழையின் காரணமாக நடைபெறாமல்…

18 mins ago

‘நவம்பர்… தமிழகத்திற்கு அதிக மழை கொண்டு வரும்’ – விளக்கம் கொடுத்த வெதர்மேன்!

சென்னை : கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் கனமழை பெய்து வந்த நிலையில் தற்போது அடுத்ததாக வரும் அக்-20 ம்…

23 mins ago

ஹமாஸ் தலைவர் உயிரிழப்பு : “மீதம் இருப்பவர்களையும் அழிப்போம்” – நெதென்யாகு சபதம்!

ஜெருசலேம் : காசாவை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினருக்கும், இஸ்ரேல் ராணுவத்திற்கும் இடையே கடந்த ஒரு வருட காலமாக போர்…

41 mins ago

காலை 10 மணி வரை இந்த 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்!

சென்னை : வங்க கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று கரையைக் கடந்தது. இதனால், தமிழகம் மற்றும்…

1 hour ago

பை பை ஆஸி.! இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது தென்னாப்பிரிக்கா மகளிர் அணி!

துபாய் : நடைபெற்று வரும் மகளிர் உலகக் கோப்பை தொடரில் முதல் அரை இறுதிப் போட்டியானது இன்று நடைபெற்றது. இந்தப்…

10 hours ago

நாளை எந்தெந்த இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு? வானிலை மையம் கொடுத்த அலர்ட்!

சென்னை : மத்தியமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று…

13 hours ago