ஈரோடு ஐ.ஆர்.டி மருத்துவக் கல்லூரி கட்டணத்தை, அரசு மருத்துவக் கல்லூரிக்கு இணையாக குறைத்து தமிழக அரசு அரசாணை வெளியீடு
ஈரோடு மாவட்டம் பெருந்துறை மருத்துவ கல்லூரி மாணவர்களிடம் அரசு கட்டணம் வசூலிக்கப்படும் என அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. மருத்துவ கல்லூரி மாணவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில் அந்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
பெருந்துறையில் போக்குவரத்து துறையின் கீழ் செயல்பட்டு வந்த மருத்துவ கல்லூரி 2018-ல் சுகாதாரத்துறை கீழ் வந்தது. சுகாதாரத்துறை கீழ் அரசு மருத்துவக் கல்லூரியாக அறிவிக்கப்பட்ட பின்பும் பழைய கட்டணமே வசூலிக்கப்படும் வந்தது.
அரசு மருத்துவக் கல்லூரிக்குரிய மருத்துவ கட்டணங்களை மட்டுமே வசூலிக்க கோரி மாணவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில், மாணவர்களின் கோரிக்கையை ஏற்று எம்பிபிஎஸ் படிப்புக்கு ஆண்டுக் கட்டணமாக 13 ஆயிரத்து 610 என நிர்ணயித்து தமிழக அரசு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியை தொடர்ந்து ஈரோடு பெருந்துறை கல்லூரிக்கும் அரசு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சென்னை : கமல்ஹாசன் கடைசியாக நடித்த இந்தியன் 2 படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்து…
சென்னை : இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ், சஞ்சனா, சுவாசிகா ஆகியோர் நடித்துள்ள 'லப்பர்…
ஆந்திரா : ஜெகன் மோகன் ரெட்டியின் ஆட்சியில் திருப்பதி கோவிலின் பிரசாத லட்டுவில் விலங்குகளின் கொழுப்பு பயன்படுத்தப்பட்டதாக ஆந்திர மாநில…
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தொகுப்பாளராக செயல்பட்டு வந்த மணிமேகலை நிகழ்ச்சியில் பிரியங்கா தன்னுடைய வேலையை செய்யவிடாமல் அவருடைய…
ஆந்திர பிரதேசம் : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி பிரசாதமாக அளிக்கப்படும் லட்டு தயாரிக்க, பயன்படுத்தப்படும் நெய்யில், மீன் எண்ணெய்,…
சென்னை -சத்தான பாசிப்பயிறு லட்டு செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; பாசிப்பயிறு- ஒரு…