தமிழகத்தில் விருப்ப ஓய்வு பெறும் அரசு ஊழியர்களுக்கு புதிய வெயிட்டேஜ் கணக்கீட்டு முறையை தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழகத்தில் அரசு ஊழியர்களின் ஓய்வு பெரும் வயது 60 ஆக அண்மையில் உயர்த்தப்பட்டது.இந்நிலையில்,விருப்ப ஓய்வு பெரும் அரசு ஊழியர்களின் வெயிட்டேஜ் கணக்கீட்டு முறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசின் மனிதவள மேம்பாட்டு துறை அறிவித்துள்ளது.
முன்னதாக,54 வயதில் விருப்ப ஓய்வு பெற்றவர்களுக்கு 5 ஆண்டுகள் வெயிட்டேஜ் கொடுக்கப்பட்டு 60 ஆண்டுகள் பணிபுரிந்ததாக கருதி, அதனடிப்படையில் மாத ஓய்வூதியம் வழங்கப்பட்டு வந்தது.ஆனால், தற்போது புதிய வெயிட்டேஜ் கணக்கீட்டு முறைப்படி,55 வயதுக்கு கீழ் பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்றால் 5 ஆண்டுகள் பணியாற்றியதற்கான வெயிட்டேஜ் கொடுக்கப்படவுள்ளது.
அதைப்போல,56 வயதில் விருப்ப ஓய்வு பெற்றால் 4 ஆண்டுகளுக்கான வெயிட்டேஜ் கொடுக்கப்பட்டு 60 ஆண்டுகள் பணி புரிந்ததாக கருதி ஓய்வூதியம் வழங்கப்படும்.அதே சமயம்,அரசு ஊழியர்கள் 57 வயதில் விருப்ப ஓய்வு பெற்றால்,3 ஆண்டுகளுக்கான வெயிட்டேஜ் கொடுக்கப்பட்டு,60 ஆண்டுகள் பணி புரிந்ததற்கான ஓய்வூதியம் வழங்கப்படும்..
மேலும் 59 வயதில் விருப்ப ஓய்வு பெற்றால் 1 ஆண்டுக்கான வெயிட்டேஜ் கொடுக்கப்பட்டு,60 ஆண்டுகள் பணி புரிந்ததாக கருதி ஓய்வூதியம் வழங்கப்படும்.எனினும்,அரசு ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வு பெற்ற மாதத்தில் இருந்து மாத சம்பளம் நிறுத்தப்பட்டு விடும் என்று தமிழக அரசால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…