கணக்கீட்டை காட்டி அரசு தப்பிக்க முடியாது. மின் கட்டணத்தில் நடந்திருப்பது கொள்ளைதான்.
கொரோனா ஊரடங்கிற்கு பின், மக்களிடம் அதிகமாக மின் கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ள நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் அவர்கள் நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். கொரோனாவுக்காக தள்ளி வைக்கப்பட்ட மின்கட்டண வசூலை கொரோனா தொடர்ந்து கொண்டிருக்கும் இந்த காலத்தில் கட்டாயப்படுத்தி வசூலித்துக் கொண்டிருக்கிறது என்றும், கணக்கீட்டை காட்டி அரசு தப்பிக்க முடியாது. மின் கட்டணத்தில் நடந்திருப்பது கொள்ளைதான் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், சராசரியாக ஒரு நாளைக்கு 8 யூனிட் மின்சாரம் செலவழிக்கும் ஒரு குடும்பம், கூடுதலாக ஒரு நாளைக்கு 1/2 யூனிட் அதிகமாக செலவழித்தாலே, அந்த குடும்பம் ரூ.1130 க்கு பதிலாக ரூ.1846 கட்டணம் செலுத்த வேண்டி வரும்.
எனவே, குறைந்தபட்சம் தற்போதுள்ள வருமானமற்ற சூழ்நிலையை கவனத்தில் எடுத்து கொண்டு, 2 மாதத்திற்கு ஒருமுறை 500 யூனிட்டுக்கு அதிகமாக பயன்படுத்தினாலும், 500 யூனிட்டுக்கு கீழே என்ன கட்டண விகிதம் கணக்கிடப்பட்டதோ, அதே கட்டண விகிதத்தையே 500 யூனிட்டுக்கு மேலே பயன்படுத்துவோருக்கும் கணக்கிட வேண்டும் என்றும், கொரோனா நெருக்கடிகள் தீரும் வரை இத்தகைய கணக்கீட்டு முறையையே செயல்படுத்த வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…
சென்னை : கமல்ஹாசன் கடைசியாக நடித்த இந்தியன் 2 படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்து…