#Breaking: இனி அரசு பேருந்துகள் பகலில் இயக்கப்படும்.. போக்குவரத்துத்துறை அதிரடி!

Published by
Surya

தமிழகத்தில் இரவு ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ள நிலையில் அரசு விரைவு பேருந்துகள் அதிகாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை இயக்கப்படும் என்று போக்குவரத்துக்கு கழகம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க இரவு ஊரடங்கு உள்ளிட்ட புதிய கட்டுப்பாடுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த புதிய கட்டுப்பாடுகள், நாளை முதல் அமலுக்கு வந்து, ஏப்ரல் 30-ம் தேதி வரை அமலில் இருக்கும் என்று தமிழக அரசு கூறியுள்ளது. இந்நிலையில், இரவு ஊரடங்கு காரணமாக அரசு போக்குவரத்துக்கு கழக பேருந்துகள் பகலில் இயங்கும் என்று போக்குவரத்துக்கழகம் தெரிவித்தது.

அந்தவகையில், தமிழகத்தில் நாளை முதல் அதிகாலை 4 மணிக்கு பேருந்து போக்குவரத்து தொடங்கி, இரவு 8 மணிக்குள் பேருந்துகள் சென்றடையும் வகையில் அரசு பேருந்துகள் இயக்கப்படும் என்றும், விரைவு பேருந்துகளில் ஏற்கனவே முன்பதிவு செய்தவர்கள், தங்களின் பயணத்தேதியை மாற்றிக்கொள்ளலாம் எனவும், மாற்று பயண தேதிக்கு பதில் பேருந்து முன்பதிவு கட்டணம் வழங்கப்படும் என்று போக்குவரத்துக்கழகம் தெரிவித்துள்ளது.

அதுமட்டுமின்றி, ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கின்போது பேருந்துகள் முற்றிலுமாக இயக்கப்படாது என்று சென்னை மாநகர போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.

Published by
Surya

Recent Posts

பாரம்பரிய முறையில் மாவிளக்கு செய்வது எப்படி.?

பாரம்பரிய முறையில் மாவிளக்கு செய்வது எப்படி.?

சென்னை -புரட்டாசி சனிக்கிழமை பெரும்பாலானோர்  பெருமாளுக்கு மாவிளக்கு படைக்கப்படுவது வழக்கம் . பெருமாளுக்கு பிடித்த மாவிளக்கு செய்வது எப்படி என…

31 mins ago

குக் வித் கோமாளி 5 : அடுத்த தொகுப்பாளர் யார்? வெளியான ப்ரோமோ!

சென்னை : மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக அதிக பார்வையாளர்களைக் கொண்ட ஒரு நிகழ்ச்சி தான் 'குக் வித் கோமாளி'.…

1 hour ago

2025 ஆஸ்கர் விருது: போட்டியில் ‘வாழை’ உள்ளிட்ட 6 தமிழ் திரைப்படங்கள்!

டெல்லி : சினிமா உலகில் மிக உயரிய விருதாக கருதப்படும் ஆஸ்கர் விருது ஆண்டுதோறும் அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில்…

2 hours ago

“நாம தான் முட்டாள் ஆயிருவோம்”! மணிமேகலை-பிரியங்கா சர்ச்சையை குறித்து பேசிய KPY சரத்!

சென்னை : சமீபத்தில் வெடித்த மணிமேகலை - பிரியங்கா சர்ச்சை தற்போது வரை தணியாமல் மேலும் மேலும் வெடித்து கொண்டே…

3 hours ago

ஆம்ஸ்ட்ராங் கொலைக்கும் சீசிங் ராஜாவுக்கும் தொடர்பில்லை.! காவல்துறை விளக்கம்.!

சென்னை : பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வந்த பிரபல ரவுடி சீசிங் ராஜாவை நேற்று ஆந்திர மாநிலம் கடப்பாவில் நேற்று…

3 hours ago

ரஷ்ய சர்வதேச மேடையில் ஒலித்த தமிழ்.. கொட்டுக்காளிக்கு குவியும் விருது.!

சென்னை : இயக்குனர் பி.எஸ்.வினோத்ராஜ் இயக்கத்தில் சூரி மற்றும் அன்னா பென் நடித்துள்ள "கொட்டுக்காளி" திரைப்படம் ஒவ்வொரு சர்வதேச மேடையிலும்…

3 hours ago