சென்னை புழல் மத்திய சிறையில் 750-க்கும் மேற்பட்ட தண்டனை கைதிகள் அடைக்கப்பட்டு உள்ளனர். இவர்களில் சர்வதேச போதை பொருள் கடத்தல் கும்பலை சேர்ந்தவர்களும், தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவர்களும் இருக்கின்றனர்.
இந்த தண்டனை கைதிகள் சிறைக்குள் உல்லாசமாக வாழ்க்கை நடத்திவருவது சமீபத்தில் வெளியான புகைப்படங்கள் மூலம் தெரியவந்தது. குறிப்பாக, உயர்பாதுகாப்பு வளையத்தில் இருக்கும் சர்வதேச கைதிகள் மற்றும் முக்கியக் கொலைவழக்கில் சிக்கிய கைதிகள் சிலர், சிறைக்குள் மெத்தை, டிவி, செல்போன், குலிங் கிளாஸ் , உயர் ரக உணவு என வெளியுலகுக்குச் சிறிதும் குறைவில்லாத அளவுக்கு சுகபோக வாழ்க்கையை சிறைக்குள் அனுபவித்து வந்தது புகைப்படங்கள்மூலம் வெளியாகிப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதன்தொடர்ச்சியாக, புழல் சிறைக்குள் அதிரடி ஆய்வுசெய்யப்பட்டு, செல்போன், டி.வி, சமையலுக்குப் பயன்படுத்தக்கூடிய பொருள்களைக் காவல்துறையினர் பறிமுதல்செய்தனர். மேலும், தமிழகத்தில் உள்ள அனைத்து மத்திய சிறைச்சாலைகளிலும் ஆய்வு நடத்த சிறைத்துறை கூடுதல் டி.ஜி.பி அசுதோஷ் சுக்லா உத்தரவிட்டார். இந்தப் புகாரின் எதிரொலியாக, சிறைத் துறை அதிகாரிகள் மாற்றம் நிகழ்ந்துள்ளது. சென்னை புழல் சிறையில் உள்ள அதிகாரிகள், வேலூர், கோயம்புத்தூர், சேலம், திருச்சி ஆகிய சிறைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர். மொத்தம் 8 பேர் பணியிடை மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
DINASUVADU
சென்னை : இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் 'வேட்டையன்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது.…
சென்னை: வாழை படம் வெளியாகி உலக அளவில் மிகப்பெரிய வெற்றியைக் கொடுத்துள்ள நிலையில், அந்த படத்தில் வெளியான பாடல்களும் ரசிகர்கள்…
சென்னை : இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது தற்போது நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில்…
சென்னை : தேர்தல் 2024 மீளும் 'மக்கள்' ஆட்சி' என்ற புத்தக வெளியீட்டு சென்னையில் விழா நடைபெற்றது. அந்த விழாவில்…
டெல்லி : குவாட் மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி இன்று அதிகாலை அமெரிக்கா புறப்பட்டு சென்றார். 3 நாள் அரசுமுறைப்…
திண்டுக்கல் : ஆந்திரப் பிரதேசம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுக்களில் மிருக கொழுப்பு கலந்திருந்ததாக அம்மாநில முதலமைச்சர்…