ஆளுங்கட்சி – எதிர்க்கட்சி என்பது நாணயத்தின் இருபக்கங்கள் போன்றது ..! அமைச்சர் கடம்பூர் ராஜூ
ஆளுங்கட்சி – எதிர்க்கட்சி என்பது நாணயத்தின் இருபக்கங்கள் போன்றது என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறுகையில்,தமிழகத்தில் கேபிள் கட்டணம் உயர வாய்ப்பே இல்லை. டிராய் நிறுவனத்தின் கட்டணத்துக்கு மத்திய அரசிடம் முறையிட்டு தற்போதைய கட்டணத்தையே தொடர்வோம்.அண்ணா வழியில் வந்தவர்கள் அண்ணாவின் கொள்கையை மறந்துவிட்டனர். ஆளுங்கட்சி – எதிர்க்கட்சி என்பது நாணயத்தின் இருபக்கங்கள் போன்றது .ஆனால் தற்போது எதிர்க்கட்சியினர், எதிரிக்கட்சியினர் போல செயல்பட்டு வருகின்றனர் என்றும் அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.