மாத்திரைக்குள் கட்டுக்கம்பி..!கண்டு மிரண்ட நோயாளி.!

Default Image

ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி அருகே அமைந்துள்ள ஏராந்துரை கிரமாம் உள்ளது.இந்த கிரமாத்தை சேர்ந்த தம்பதிகளான பாண்டி மற்றும் சக்தி அவர்.
பாண்டியின் மனைவி  சக்திக்கு  உடல் நிலை சரியில்லாத் காரணத்தால் ஏர்வாடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற சென்றுள்ளார்.
ஆனால் மருத்துவர்கள் அங்கே இல்லததால் செவிலியர்களிடையே பரிசோதித்த சக்திக்கு சிப்ரோஃப்ளக்சின் (Ciproflaoxacin)  என்ற தமிழக முத்திரையிடப்பட்ட மாத்திரையை அவரிடம் கொடுத்துள்ளார்.
அதனை பெற்று கொண்ட பின்னர் வீட்டிற்கு சென்ற சக்தி மாத்திரையை உட்கொள்ள முயன்ற போது மாத்திரை பெரிய அளவில் இருந்ததால் அதனை இரண்டு துண்டுகாளாக உடைத்துள்ளார்.ஆனால் மாத்திரை உடையாமல் அப்படியே இருந்துள்ளது
அதனை உற்று நோக்கிய சக்தி மாத்திரைக்குள் கட்டுக்கம்பி இருப்பதை கன்டு அதிர்ந்து அதனை தனது கணவரிடம் எடுத்துரைத்தார்.மேலும் மாத்திரையை உள்கொள்ளும் முன் இதனை கண்டறிந்து விட்டார் இல்லையேல் இதனை முழுங்கி மேலும் உடல்நலக்குறைப்பாடு ஏற்பட்டிருக்கும் என்று தனது வேதனையை தெரிவித்தார் .
 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்