சென்னை கோயம்பேட்டில் இருந்து திருச்சி நோக்கி சென்ற அரசுப் பேருந்துக்கு செங்கல்பட்டு அருகேயுள்ள பரனூர் என்ற சுங்கச்சாவடியில் கட்டணம் வழங்குமாறு கேட்டதால், பேருந்து ஓட்டுநருக்கும் கட்டணம் கேட்ட சுங்கச்சாவடி ஊழியருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.
ஒரு கட்டத்தில் வாக்குவாதமானது முற்றி அவர்களுக்கிடையே கைகலப்பு ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த பேருந்து ஓட்டுனர் அரசுப் பேருந்தை சுங்கச்சாவடியின் குறுக்கே நிறுத்தி விட்டார் இதனால் அங்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.பேக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் நூற்றுக்கணக்கான பேருந்துகள் செல்ல முடியாமல் 5 மணி நேரமாக ஒரே இடத்தில் நின்றது.
மேலும் சம்பவம் நடந்த பேருந்தில் இருந்து இறங்கிய பயணிகள் ஆத்திரம் தாங்கமால் சுங்கச் சாவடியை அடித்து நெறுக்கி சூறையாடியனர். இந்த தகவல் அறிந்து வந்த நூற்றுக்கும் மேற்பட்ட காவல்துறையினர் கலவரம் செய்தவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர் இதனால் அந்த பகுதி 5 மணிநேரமாக பரபரப்புடன் காணப்பட்டது.
மேலும் இந்தசுங்கச்சாவடியில் பணிபுரியும் வடமாநிலத்தவர்கள் மிகவும் தரக்குறைவாக நடந்து கொள்வதாக சக வாகன ஓட்டிகள் குற்றம்சாட்டி உள்ளனர்.சுங்க சாவடி சூறையாடப்பட்ட சம்பவத்தால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
சென்னை : கமல்ஹாசன் கடைசியாக நடித்த இந்தியன் 2 படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்து…
சென்னை : இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ், சஞ்சனா, சுவாசிகா ஆகியோர் நடித்துள்ள 'லப்பர்…
ஆந்திரா : ஜெகன் மோகன் ரெட்டியின் ஆட்சியில் திருப்பதி கோவிலின் பிரசாத லட்டுவில் விலங்குகளின் கொழுப்பு பயன்படுத்தப்பட்டதாக ஆந்திர மாநில…
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தொகுப்பாளராக செயல்பட்டு வந்த மணிமேகலை நிகழ்ச்சியில் பிரியங்கா தன்னுடைய வேலையை செய்யவிடாமல் அவருடைய…
ஆந்திர பிரதேசம் : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி பிரசாதமாக அளிக்கப்படும் லட்டு தயாரிக்க, பயன்படுத்தப்படும் நெய்யில், மீன் எண்ணெய்,…
சென்னை -சத்தான பாசிப்பயிறு லட்டு செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; பாசிப்பயிறு- ஒரு…