அரசுப் பேருந்துக்கு சுங்க கட்டணம் கேட்ட ஊழியர்கள்..!அடத்து நொறுக்கி ஆத்திரத்தை தீர்த்த பயணிகள்.! பரபரப்பு சம்பவம்

Default Image
  • செங்கல்பட்டு அருகே அரசு பேருந்துக்கு சுங்க கட்டணம் கேட்ட ஊழியர்கள்
  •  ஆத்திரத்தில் சுங்கச்சாவடியை அடித்து நொறுக்கிய பயணிகளால் பரபரப்பு

சென்னை கோயம்பேட்டில் இருந்து திருச்சி நோக்கி சென்ற அரசுப் பேருந்துக்கு செங்கல்பட்டு அருகேயுள்ள பரனூர் என்ற சுங்கச்சாவடியில் கட்டணம் வழங்குமாறு கேட்டதால், பேருந்து ஓட்டுநருக்கும் கட்டணம் கேட்ட  சுங்கச்சாவடி ஊழியருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.

ஒரு கட்டத்தில் வாக்குவாதமானது முற்றி அவர்களுக்கிடையே கைகலப்பு ஏற்பட்டுள்ளது.  ஆத்திரமடைந்த  பேருந்து ஓட்டுனர் அரசுப் பேருந்தை சுங்கச்சாவடியின் குறுக்கே நிறுத்தி விட்டார் இதனால் அங்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.பேக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் நூற்றுக்கணக்கான பேருந்துகள் செல்ல முடியாமல் 5 மணி நேரமாக ஒரே இடத்தில் நின்றது.

மேலும் சம்பவம் நடந்த பேருந்தில் இருந்து இறங்கிய பயணிகள் ஆத்திரம் தாங்கமால் சுங்கச் சாவடியை அடித்து நெறுக்கி சூறையாடியனர். இந்த தகவல் அறிந்து வந்த நூற்றுக்கும் மேற்பட்ட காவல்துறையினர் கலவரம் செய்தவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர் இதனால் அந்த பகுதி 5 மணிநேரமாக பரபரப்புடன் காணப்பட்டது.

மேலும் இந்தசுங்கச்சாவடியில் பணிபுரியும் வடமாநிலத்தவர்கள்  மிகவும் தரக்குறைவாக நடந்து கொள்வதாக சக வாகன ஓட்டிகள் குற்றம்சாட்டி உள்ளனர்.சுங்க சாவடி சூறையாடப்பட்ட சம்பவத்தால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்