பள்ளிகளுக்கு முன்கூட்டியே விடுமுறை அளிப்பது குறித்து முடிவு என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தகவல்.
தமிழகத்தில் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பள்ளிகளுக்கு முன்கூட்டியே விடுமுறை அளிப்பது குறித்து ஆலோசனை நடைபெற்று வருவதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். கோடை வெயில் சுட்டெரிக்கும் நிலையில், விடுமுறை மற்றும் மாணவர்களின் நலன் சார்ந்த அறிவிப்பு விரைவில் முதல்வர் அலுவலகத்தில் இருந்து வெளியாகும் என்று செய்தியாளர் சந்திப்பில் கூறினார். கொரோனா காலத்தில் விடுமுறை அளிக்கப்படாதல் பாடங்கள் நடத்தி முடிக்கப்படாமல் இருக்கிறது என்றும் விடுமுறை அளிப்பது குறித்து ஆலோசனை நடைபெற்று வருவதாகவும் விளக்கமளித்தார்.
கொரோனா காலத்தில் பள்ளிகள் இயங்காமல் இருந்ததே மாணவர்களிடையே மோதல்கள் ஏற்பட காரணம் என்று சமீபத்தில் மாணவர்களிடையே ஏற்பட்ட மோதல் குறித்து தெரிவித்தார். இதனைத்தொடர்ந்து பேசிய அமைச்சர், தமிழகத்தில் பள்ளி மாணவர்களின் மன அழுத்தத்தை போக்குவதற்கு மத்திய அரசின் மாணவர்களுக்கான திட்டத்தின் கீழ் மனநல ஆலோசனை வழங்கப்படும் கூறினார். இதனிடையே நாட்டில் வெயிலின் தாக்கம் அதிகம் இருப்பதால், ஒரு சில மாநிலங்களில் பள்ளிகளுக்கு முன்கூட்டியே விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்திலும் விடுமுறை அளிக்க முடிவு எடுத்திருப்பதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் 2025 இன் நான்காவது போட்டி இன்று விசாகப்பட்டினத்தில் உள்ள டாக்டர் ஒய்எஸ் ராஜசேகர ரெட்டி மைதானத்தில் டெல்லி கேபிடல்ஸ்…
விசாகப்பட்டினம் : விசாகப்பட்டினத்தில் தற்போது நடைபெற்று வரும் போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டன் அக்சர் படேல்…
விசாகப்பட்டினம் : ஐபிஎல் 2025 சீசனின் 4வது போட்டி டெல்லி கேபிடல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையே…
விசாகப்பட்டினம் : ஐபிஎல் தொடங்குவதற்கு முன்பு டெல்லி அணியின் கேப்டனாக செயல்படுவார் என கணிக்கப்பட்ட கே.எல்.ராகுல், இன்றைய முதல் போட்டியில்…
சென்னை : தமிழில் சமீபத்தில் வெளியாகி சக்கை போடு போட்ட 'டிராகன்' திரைப்படம், தமிழ் மட்டுமின்றி தெலுங்கு மற்றும் கன்னடத்திலும்…
விசாகப்பட்டினம் : ஐபிஎல் 2025 தொடரில் இன்று நடைபெறும் 4வது போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்…