Good News: தமிழகத்தில் சமூக தொற்று இல்லை – பீலா ராஜேஷ்

Published by
பாலா கலியமூர்த்தி

தமிழகத்தில் புதிதாக 102 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்திருந்தார். ஏற்கனவே 309 பேருக்கு பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது அது 411 ஆக அதிகரித்துள்ளது. இன்று கொரோனா உறுதி செய்யப்பட்ட 102 பேரின் 100 பேர் டெல்லி மாநாட்டிற்கு சென்று வந்தவர்கள் என கூறியுள்ளார். மேலும் தமிழகத்தில் மொத்தம் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 411 பேரில் 364 பேர் டெல்லி மாநாட்டிற்கு சென்று வந்தவர்கள் என தெரிவித்துள்ளார்.

இதையடுத்து கொரோனவால் பாதிக்கப்பட்ட 411 பேரின் உடல்நிலை சீராக உள்ளது என்றும் அமெரிக்காவில் இருந்து வந்த ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என கூறியுள்ளார். இந்த நோய் யாரை வேண்டுமானாலும் தாக்கலாம். அதனால் தகவல் வரும்போது வீடு வீடாக சென்று சோதனை செய்து வருகிறோம். இதில் நிறைய பணியாளர்களை பயன்படுத்தி வருகிறோம் என்றும் இது நோய் தான், எளிதில் குணப்படுத்திவிடலாம் என தெரிவித்தார். அதனால் யாரும் பயப்பட வேண்டாம். ஆனால் கொஞ்சம் விழிப்புணர்வு வேண்டும் என்று குறிப்பிட்டார்.

எதாவது அறிகுறி தெரிந்தால் உடனடியாக மருத்துவமனையை அணுக வேண்டும். 20 நாட்கள் மட்டுமே தனிமைப்படுத்தப்படுவீர்கள் என கூறினார். அதை யாரும் பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டாம் என வலியுறுத்தியுள்ளார். இதையடுத்து கொரோனா வைரஸ் பரவலை தடுக்க தமிழகம் முழுவவதும் தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றனர். தமிழகம் கொரோனா தொற்றில் இன்னும் 2 ஆம் நிலையில்தான் இருக்கிறது என தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா வைரஸ் சமூக தொற்றாக மாறவில்லை என குறிப்பிட்டார். மேலும் தமிழகம் முழுவதும் 90,412 பேர் வீடு கண்காணிப்பில் உள்ளனர் என சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். 

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

40 இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம் – டிஐஜி உத்தரவு.!40 இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம் – டிஐஜி உத்தரவு.!

40 இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம் – டிஐஜி உத்தரவு.!

சென்னை : திருச்சி சரகத்தில் 40 காவல் ஆய்வாளர்கள் (இன்ஸ்பெக்டர்கள்) பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.   வெளியாகியுள்ளது. மேலும், புதுக்கோட்டை மாவட்டத்தில்…

3 minutes ago
எல்லை தாண்டி பிடிபட்ட BSF வீரர்…திருப்பி அனுப்பிய பாகிஸ்தான்!எல்லை தாண்டி பிடிபட்ட BSF வீரர்…திருப்பி அனுப்பிய பாகிஸ்தான்!

எல்லை தாண்டி பிடிபட்ட BSF வீரர்…திருப்பி அனுப்பிய பாகிஸ்தான்!

டெல்லி : இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே நடந்த போர் என்பது பெரிய பதற்றத்தை ஏற்படுத்தி இது எங்கு வரைபோக…

47 minutes ago
ராணுவ கர்னல் குறித்து சர்ச்சைப் பேச்சு – மன்னிப்பு கேட்ட விஜய் ஷா.!ராணுவ கர்னல் குறித்து சர்ச்சைப் பேச்சு – மன்னிப்பு கேட்ட விஜய் ஷா.!

ராணுவ கர்னல் குறித்து சர்ச்சைப் பேச்சு – மன்னிப்பு கேட்ட விஜய் ஷா.!

டெல்லி : மத்தியப் பிரதேச பழங்குடி அமைச்சர் குன்வர் விஜய் ஷா, கர்னல் சோபியா குரேஷியை 'பயங்கரவாதிகளின் சகோதரி' என்று…

48 minutes ago
மாணவர்களே அலர்ட்! 10ஆம் வகுப்பு தேர்வு ரிசல்ட் எப்போது தெரியுமா?மாணவர்களே அலர்ட்! 10ஆம் வகுப்பு தேர்வு ரிசல்ட் எப்போது தெரியுமா?

மாணவர்களே அலர்ட்! 10ஆம் வகுப்பு தேர்வு ரிசல்ட் எப்போது தெரியுமா?

சென்னை : 10ஆம் வகுப்பு (SSLC) பொதுத் தேர்வுகள் மார்ச் 28 முதல் ஏப்ரல் 15, 2025 வரை நடைபெற்றன. இந்த…

1 hour ago
உச்சநீதிமன்றத்தின் 52-வது தலைமை நீதிபதியாக பதவியேற்றார் பி.ஆர்.கவாய்.!உச்சநீதிமன்றத்தின் 52-வது தலைமை நீதிபதியாக பதவியேற்றார் பி.ஆர்.கவாய்.!

உச்சநீதிமன்றத்தின் 52-வது தலைமை நீதிபதியாக பதவியேற்றார் பி.ஆர்.கவாய்.!

டெல்லி : உச்சநீதிமன்றத்தின் 52-வது தலைமை நீதிபதியாக பி.ஆர். கவாய் இன்று பதவியேற்றார். அவருக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு…

2 hours ago
+2 துணை தேர்விற்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்! கடைசி தேதி இதுதான் மாணவர்களே..+2 துணை தேர்விற்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்! கடைசி தேதி இதுதான் மாணவர்களே..

+2 துணை தேர்விற்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்! கடைசி தேதி இதுதான் மாணவர்களே..

சென்னை : 2025 ஆம் ஆண்டு +2 (12ஆம் வகுப்பு) பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கும், தனியாக தேர்வு எழுதியவர்களுக்கும்…

2 hours ago