குட்நியூஸ்..!விதவை,கணவனரால் கைவிடப்பட்ட பெண்களுக்கு 25% இடஒதுக்கீடு – தமிழக அரசு அரசாணை!

Published by
Edison

அங்கன்வாடிப் பணியாளர் நேரடி நியமன விதிகளில் திருத்தம் செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் அங்கன்வாடிப் பணியாளர் ,குறு அங்கன்வாடிப் பணியாளர் மற்றும் உதவியாளர் பணியிடங்களில் விதவை மற்றும் கணவரால் கைவிடப்பட்டோருக்கு 25% இடஒதுக்கீடு வழங்கி தமிழக அரசு அரசணை வெளியிட்டுள்ளது.

அந்த அரசாணையில் கூறப்பட்டிருப்பதாவது:

“அங்கன்வாடிப் பணியாளர், குறு அங்கன்வாடிப் பணியாளர் மற்றும் அங்கன்வாடி உதவியாளர் பணியிடங்களுக்கு மாவட்டத்தினை ஓர் அலகாக கொண்டு இனசுழற்சி முறையிலான இடஒதுக்கீட்டு முறையினையும், இனசுழற்சி முறையை கடைப்பிடிப்பது தொடர்பாக பணியாளர் மற்றும் நிருவாகச் சீர்த்திருத்தத் துறையால் அவ்வப்போது வெளியிடப்படும் ஆணைகளையும் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் ஆணையிடப்பட்டுள்ளது.

அதே சமயம்,அங்கன்வாடிப் பணியாளர், குறு அங்கன்வாடிப் பணியாளர் மற்றும் அங்கன்வாடி உதவியாளர் பணியிடங்களுக்கு தகுதிகள் நிர்ணயம் செய்து ஆணையிடப்பட்டுள்ளது.

ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள், இயக்குநர் மற்றும் குழும இயக்குநர் அவர்கள் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டத்தின்கீழ் முதன்மை அங்கன்வாடிப் பணியாளர்,குறு அங்கன்வாடிப் பணியாளர் மற்றும் அங்கன்வாடி உதவியாளர் பணியிடங்களில் பெண்களை மட்டுமே பணியமர்த்த வேண்டும் என்று ஆணையிடப்பட்டுள்ளது என்றும் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் சத்துணவு திட்டத்தின் கீழ் அனுமதிக்கப்பட்டுள்ள சத்துணவு அமைப்பாளர், சமையலர் மற்றும் சமையல் உதவியாளர் பணியிடங்களில் 25 விழுக்காடு பணியிடங்களை விதவைகள் / கணவரால் கைவிடப்பட்டோரைக் கொண்டு நிரப்பிட அரசாணையில் ஆணையிடப்பட்டுள்ளது என்றும் தெரிவிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள், இயக்குநர் மற்றும் குழும் இயக்குநர் அவர்கள் தனது கடிதத்தில், அங்கன்வாடி ஊழியர்கள் காலிப்பணியிடங்களில், ஆதரவற்ற விதவைகள் / விதவைகள் மற்றும் கணவனால் கைவிடப்பட்டோர்களுக்கு 25 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்க அங்கன்வாடிப் பணியாளர், குறு அங்கன்வாடிப் பணியாளர் மற்றும் அங்கன்வாடி உதவியாளர் பணியிடங்களுக்கு தகுதிகள் நிர்ணயம் செய்து ஆணையிடப்பட்டுள்ள அரசாணைக்கு திருத்தம் வெளியிடுமாறு அரசைக் கேட்டுக் கொண்டுள்ளார்.

ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள், இயக்குநர் மற்றும் குழும் இயக்குநர் அவர்களின் கருத்துருவினை கவனமுடன் அரசு பரிசீலனை செய்தது. பரிசீலனைக்குப் பின், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டத்தின் கீழ் ஒப்பளிப்பு செய்யப்பட்டுள்ள முதன்மை அங்கன்வாடிப் பணியாளர்,குறு அங்கன்வாடிப் பணியாளர் மற்றும் அங்கன்வாடி உதவியாளர் பணியிடங்களுக்கான நேரடி நியமனங்களில், 25 விழுக்காடு பணியிடங்களை, இப்பணியிடங்களுக்கு மேலே மூன்றாவதாகப் படிக்கப்பட்ட அரசாணையில் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள
தகுதிகள் நிபந்தனைகளை நிறைவு செய்யும் விதவைகள்/கணவரால் கைவிடப்பட்டோரைக் கொண்டு, முன்னுரிமையின் அடிப்படையில் நிரப்ப அரசு ஆணையிடுகிறது”,என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Recent Posts

சொந்த மண்ணில் சென்னைக்கு சம்பவம் செய்த பஞ்சாப்! 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி!

சென்னை : இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் அணியும், சென்னை அணியும் மோதியது. போட்டியில்…

41 minutes ago

பட்டையை கிளப்புமா ரெட்ரோ! முதல் நாளில் இவ்வளவு வசூல் செய்யுமா?

சென்னை : கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில், சூர்யா, பூஜா ஹெக்டே, ஜெயராம், ஜோஜு ஜார்ஜ், நாசர், பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட…

2 hours ago

சுற்றி சுற்றி அடித்த சுட்டி குழந்தை! பஞ்சாப் அணிக்கு சென்னை வைத்த டார்கெட்!

சென்னை : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்று சேப்பாக்கம் மைதானத்தில்…

3 hours ago

நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு! முதல்வர் ஸ்டாலின் வைத்த கேள்விகள்!

சென்னை : இன்று பிரதமர் மோடி தலைமையில் மதியாய் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அதில் அரசியல் சார்ந்து பல்வேறு முக்கிய…

4 hours ago

தமிழ்நாடு அரசு சாதிவாரி சர்வே எடுக்க வேண்டும்! பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தல்!

சென்னை : இன்று பிரதமர் மோடி தலைமையில் மதியாய் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அதில் அரசியல் சார்ந்து பல்வேறு முக்கிய…

5 hours ago

வெற்றிபெறுமா பஞ்சாப்? சென்னைக்கு எதிராக பந்துவீச்சு தேர்வு!

சென்னை : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்று சேப்பாக்கம் மைதானத்தில்…

5 hours ago