#GoldPrice: தங்கம் விலை மீண்டும் உயர்வு!

Default Image

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.34 உயர்ந்து, ரூ.4,884க்கு விற்பனை.

அட்சயதிருதியைத் தினம் நெருங்கிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் தங்கம் விலை கடந்த 10 நாட்களாக குறைந்து வந்தது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. வரும் மே 3-ம் தேதி, அந்த அட்சய திரிதியை நாள். இந்த நாளில் தங்கம் வாங்கினால் தங்கம் சேர்ந்துகொண்டே இருக்கும் என்று பெரும்பாலான மக்கள் நம்புகிறார்கள். எனவே கடந்த 19-ம் தேதி ஒரு பவுன் ஆபரணத் தங்கம் ரூ.40,200-க்கு விற்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து, தங்கம் விலை குறைந்த வண்ணம் இருந்த நிலையில், இன்று மீண்டும் உயர்வை கண்டுள்ளது. அதன்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.34 உயர்ந்து, ரூ.4,884க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.272 உயர்ந்து, 8 கிராம் சேர்ந்த ஒரு சவரன் ரூ.39,072க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் வெள்ளி விலை கிராமுக்கு 20 காசு குறைந்து ரூ.68.80க்கு வர்த்தகமாகிறது.

இதனிடையே, சென்னையில் ஆபரண தங்கத்தின் தங்கம் விலை நேற்று சவரனுக்கு ரூ.200 குறைந்து ஒரு பவுன் தங்கம் ரூ.38,696க்கு விற்பனையானது. நேற்று கிராமுக்கு ரூ.25 குறைந்து ரூ.4,837க்கு விற்பனை செய்யப்பட்டது. கடந்த 10 நாட்களில் மட்டும் தங்கம் விலை பவுனுக்கு ரூ.1,504 குறைந்திருந்த நிலையில், இன்று சவரனுக்கு ரூ.272 உயர்ந்து, ரூ.39,072க்கு விற்பனை செய்யப்படுகிறது. அட்சய திரிதியை நாள் நெருங்கி வரும் நிலையில், தங்கம் விலை மீண்டும் உயர்ந்துள்ளது நகை விரும்பிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

live news update
RN Ravi Vice Chancellor Meeting
A gold ATM in Shanghai
ambati rayudu About RCB
Udhayanidhi Stalin tn assembly
thangam thennarasu tn assembly
CM MKStalin