பொன்.மாணிக்கவேல் யாரோ ஒருவரின் கைப்பாவையாக செயல்படுகிறார் …! அமைச்சர் சி.வி.சண்முகம்
பொன்.மாணிக்கவேல் யாரோ ஒருவரின் கைப்பாவையாக செயல்படுகிறார் என்று அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அமைச்சர் சி.வி.சண்முகம் கூறுகையில், பொன்.மாணிக்கவேல் இதுவரை எத்தனை சிலைகளை கண்டுபிடித்துள்ளார். எத்தனை பேரை கைது செய்துள்ளார் என்பதை தெரிவிக்க வேண்டும் .பொன்.மாணிக்கவேல் திட்டமிட்டு உள்நோக்கத்தோடு, யாரோ ஒருவரின் கைப்பாவையாக செயல்படுகிறார்.
பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிப்பது ஆளுநரின் கையில் தான் உள்ளது. கட்சிக்கு விரோதமாக யார் செயல்பட்டாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என்பதற்கு துணை முதல்வரின் தம்பி ஓ.ராஜா நீக்கம் ஓர் உதாரணம் என்றும் அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.