உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சுவாதி ஆஜர்.
கோகுல்ராஜ் கொலை வழக்கில் பிறழ் சாட்சியாக மாறிய சுவாதி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் இரண்டாவது முறையாக ஆஜரானார். கடந்த 25-ஆம் தேதி சுவாதி ஆஜரான நிலையில் வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டதால் இன்று மீண்டும் ஆஜரானார். பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நீதிபதிகள் எம்எஸ் ரமேஷ், ஆனந்த் வெங்கடேஷ் அமர்வின் முன் சுவாதி ஆஜராகியுள்ளார்.
கோகுல்ராஜ் கொலை வழக்கு உத்தரவுகளை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீடு வழக்குகளில் கடந்த 25-ஆம் தேதி முக்கிய சாட்சியாக கருதப்படும் சுவாதி ஆஜராகி வாக்குமூலம் அளித்திருந்தார். அப்போது, நீதிபதிகள் கேட்ட அனைத்து கேள்விகளுக்கும் சுவாதி நான் இல்லை, எனக்கு தெரியாது என ஒரே பதிலே சொல்லியிருந்தார். உண்மையை மனசாட்சிக்கு உட்பட்டு சொல்லுங்கள் என நீதிபதிகள் கேட்டதற்கு சுவாதி கண்கலங்கியுள்ளார்.
நீதிமன்றம் விளையாட்டு மைதானமா? சத்ய பிரமாணம் எடுத்தபின் பொய் சாட்சி கூறுவது ஏன்? வீடியோவில் உங்களையே பார்த்து தெரியாது என்கிறீர்கள். எவ்வளவு நாட்கள் உண்மையை மறைக்க முடியும்? என சுவாதிக்கு நீதிபதி சரமாரி கேள்வி எழுப்பினர். வாக்குமூலம் பொய் என்றால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உயர் நீதிமன்றம் நீதிபதிகள் எச்சரிக்கையும் விடுத்தனர்.
கீழமை நீதிமன்றத்தைப் போல, இந்த நீதிமன்றம் எளிதாக கடந்து செல்லாது, உண்மையை மறைத்தால், நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கவேண்டிய சூழல் வரும் என எச்சரிக்கை விடுத்து, சுவாதியை மீண்டும் வரும் இன்று ஆஜர்படுத்த உயர் நீதிமன்றம் மதுரை கிளை விசாரணை அதிகாரிக்கு உத்தரவிட்டிருந்தது. இது கடைசி வாய்ப்பு என்றும் இன்று ஆஜராகும்போது இதே நிலை நீடித்தால் அவமதிப்பு நடவடிக்கை எடுக்க நேரிடும் என நீதிபதிகள் எச்சரிக்கை விடுத்திருந்தனர். இந்த நிலையில், இன்று சுவாதி நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார்.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…