கடவுளே! இனியும் இப்படி ஒரு சம்பவம் நடக்க கூடாது! – மயூரா ஜெயக்குமார்

Published by
லீனா

தற்கொலை செய்து கொண்ட கோவை மாணவி உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்திய, தமிழக காங்கிரஸ் செயல் தலைவர் மயூரா ஜெயக்குமார். 

கோவையை சேர்ந்த 17 வயது மாணவி ஆர்எஸ் புரம் பகுதியில் உள்ள சின்மயா வித்யாலயா என்ற தனியார் பள்ளியில் 11-ஆம் வகுப்பு வரை படித்திருந்தார். இதனை அடுத்து இவர் தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் கதவை உள்பக்கமாக தாழ்ப்பாள் போட்டுக் கொண்டு, கடிதம் எழுதி வைத்துவிட்டு, ஃபேனில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இதையடுத்து, மாணவியின் பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர். போலீஸ் விசாரணையில்,  மாணவிக்கு அவர் பயின்ற பள்ளி ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி என்ற ஆசிரியர் மூலம், பாலியல் தொந்தரவு இருந்தது தெரிய வந்தது. இந்நிலையில், போலீசார் அவர் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை சிறையில் அடைத்தனர்.

அதனை  தொடர்ந்து அப்பள்ளி முதல்வர் மீதும் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, தலைமறைவாக இருந்த மீரா ஜாக்சனை கைது செய்ய தனிப்படை அமைத்து தேடப்பட்டு வந்தது. சின்மயா வித்யாலயா மெட்ரிக் பள்ளி முதல்வர் மீரா ஜாக்சன், பெங்களூரில், தலைமறைவாக இருந்த நிலையில், மீரா ஜாக்சனை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

பிரேத பரிசோதனைக்கு பின், மாணவியின் உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. அவரது உடலுக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி, அன்பில் மகேஷ் ஆகியோர் அஞ்சலி செலுத்திய நிலையில்,  தமிழக காங்கிரஸ் செயல் தலைவர் மயூரா ஜெயக்குமார் அவர்கள், மாணவியின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘நினைத்தாலே மனம் பதறுகிறது, கோவை பள்ளி மாணவி பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்பட்டு தற்கொலை செய்து கொண்டார், அவர் உடலுக்கு அஞ்சலி செலுத்தினேன், கடவுளே! இனியும் இப்படி ஒரு சம்பவம் நடக்க கூடாது! இந்த இழப்பை தாங்கிக்கொள்ள மாணவியின் பெற்றோருக்கு மன தைரியத்தை கொடு!’ என பதிவிட்டுள்ளார்.

Recent Posts

“மதமும், சாதியும் ஒரு மனிதனை வெறுக்கவைக்கும்”.. அஜித் பேசிய வைரல் வீடியோ.!

“மதமும், சாதியும் ஒரு மனிதனை வெறுக்கவைக்கும்”.. அஜித் பேசிய வைரல் வீடியோ.!

சென்னை : நடிகர் அஜித்குமார் அண்மையில், "வீனஸ் மோட்டார்சைக்கிள் டூர்” என்ற பைக் டூர் நிறுவனத்தை அதிகாரப்பூர்வமாக தொடங்கினார். சென்னையை…

18 mins ago

நவராத்திரி நான்காம் நாள் ஸ்பெஷல்..! கதம்ப சாதம் செய்வது எப்படி..?

சென்னை -நவராத்திரி நான்காம் நாளின் நெய்வேத்தியமான கதம்ப சாதம் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பின் மூலம் தெரிந்து…

20 mins ago

ராபர்ட் மாஸ்டருடன் திருமணமா? விளக்கம் கொடுத்த வனிதா!

சென்னை : நடிகை வனிதா விஜயகுமார் மற்றும் நடன இயக்குநர் ராபர்ட் மாஸ்டர் இருவரும் கடந்த சில நாட்களுக்கு முன்பு…

25 mins ago

ஐபிஎல் 2025 : ‘ஏலத்தின் விதிகளை மாற்றுங்கள்’ ! பிசிசிஐக்கு கடிதம் எழுதிய உரிமையாளர்கள்?

சென்னை : அடுத்த ஆண்டில் நடைபெறப்போகும் ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலத்தின் விதிமுறைகளை சமீபத்தில் பிசிசிஐ வெளியிட்டிருந்தது. இந்த மெகா…

42 mins ago

மணிமேகலை vs பிரியங்கா : இதெல்லாம் ஒரு பிரச்சினையா? சீறிய ஜிபி முத்து!!

சென்னை : மணிமேகலை மற்றும் பிரியங்கா இருவருக்கும் இடையே எழுந்த பிரச்சினை பெரிய அளவில் பேசுபொருளாகி தற்போது மெல்ல மெல்லக்…

2 hours ago

இந்த 4 மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்சு அலர்ட்.. அடுத்த 5 நாட்களுக்கு வெளுக்கப்போகும் மழை.!

சென்னை : ஆந்திர கடலோரப்பகுதிகளை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக,…

2 hours ago