6 கோடி அல்லது 2 கோடி கொடு – தொழிலதிபர் மகனை கடத்தி வைத்துக்கொண்டு பேரம்பேசிய கும்பல்!

Published by
Rebekal

6 கோடி அல்லது 2 கோடி கொடு என திருச்சியிலுள்ள தொழிலதிபர் மகனை கடத்தி வைத்துக்கொண்டு பேரம்பேசிய கும்பலிடமிருந்து சிறுவனை மீட்ட காவல்துறையினர்.

திருச்சியை சேர்ந்த தொழிலதிபர் கண்ணப்பனின் மகன் தான் 12 வயது சிறுவன் முத்தையா. இவன் நேற்று மாலை வீட்டுக்கு வெளியில் நின்று விளையாடிக்கொண்டிருந்த போது காரில் வந்த மர்ம நபர்களால் கடத்தப்பட்டுள்ளார். சிறுவனை வெகுநேரமாக காணவில்லை என பெற்றோர்கள் தேட ஆரம்பித்த போது, தொழிலதிபரின் நம்பருக்கு அழைப்பு ஒன்று வந்துள்ளது. எடுத்து பேசிய போது, உங்கள் மகனை நாங்கள் கடத்தி வைத்துள்ளோம் 6 கோடி பணத்தை கொடுத்துவிட்டு கூட்டி செல்லுங்கள் என கூறியுள்ளனர்.

இதனால் பதற்றமடைந்த தொழிலதிபர் மகனை விடுமாறு கெஞ்சியதுடன், தன்னிடம் அவ்வளவு பணம் இல்லை எனவும் கூறியுள்ளார். எனவே அந்த கடத்தல் கும்பல் 2 கோடியாக குறைத்து கேட்டுள்ளது. உடனடியாக காவல்துறையினரின் உதவியை நாடிய தொழிலதிபர் இது குறித்து கூறியுள்ளார். பின் காவல்துறையினரின் வழிகாட்டுதல்படி அவர்கள் அழைத்த இடத்திற்கு செல்ல காவல்துறையினரும் சென்றுள்ளனர்.

ஆனால், அங்கு சென்று பார்த்தால் கடத்தப்பட்ட சிறுவன் காரில் இருந்துள்ளார், கடத்தியவர்கள் தப்பியோடிவிட்டனர். சிறுவனை மீட்ட காவல்துறையினர் கடத்தலுக்கு பயன்படுத்திய காரையும் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டுள்ளனர். கார் உரிமையாளர் யார் என்பதை அறிந்த போலீசார் அவரிடம் விசாரிக்க, தனது நண்பர் தான் காரை வாடகைக்கு வாங்கி சென்றதாக கூறியுள்ளார். யார் அந்த நண்பர் என்பது குறித்த விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Published by
Rebekal

Recent Posts

“யார்டா நீங்கெல்லாம்.?” இந்திய ராணுவத்திற்கு நன்கொடையா? பதறிய பாதுகாப்புத்துறை!

“யார்டா நீங்கெல்லாம்.?” இந்திய ராணுவத்திற்கு நன்கொடையா? பதறிய பாதுகாப்புத்துறை!

டெல்லி : இணையத்தில் அவ்வப்போது போலி செய்திகள் அந்தந்த சூழலுக்கு ஏற்ப பலரை  நம்ப வைக்கும்படி போலி செய்திகள் உலா…

27 minutes ago

GT vs RR: யாருக்கு கிடைக்கும் ஹாட்ரிக்? இன்று ராஜஸ்தான் – குஜராத் அணிகள் பலப்பரீட்சை.!

ஜெய்ப்பூர் : ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில் ராஜஸ்தான் - குஜராத் அணிகள் மோதுகின்றனர். ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் நடைபெறும்…

45 minutes ago

Live : இன்றைய சட்டப்பேரவை நிகழ்வுகள் முதல்.., பத்ம விருதுகள் வழங்கும் விழா வரை.!

சென்னை : நேற்றைய விடுமுறை தினத்தை தொடர்ந்து இன்று காலை அவை தொடங்கியதும், கலைஞர் பல்கலைக்கழகம் அமைப்பது குறித்த சட்ட…

1 hour ago

பத்மபூஷன் விருதை பெற குடும்பத்துடன் டெல்லி புறப்பட்ட அஜித்குமார்.!

டெல்லி : 2025ம் ஆண்டுக்கான பத்மபூஷன் விருதுகளை இன்று மாலை வழங்குகிறார் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு.  டெல்லியில் உள்ள…

2 hours ago

ஈரான் வெடி விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 40ஆக உயர்வு.!

தெஹ்ரான்: ஈரானின் தெற்கு மாகாணமான ஹோர்மோஸ்கானில் உள்ள துறைமுகத்தில் கடந்த சனிக்கிழமை ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 40…

2 hours ago

இது எங்க கோட்டை.! ‘விராட் 50, க்ருனால் 50 அடித்து அசத்தல்’.! ஆர்சிபி அபார வெற்றி..!!

டெல்லி : நடப்பு ஐபிஎல் தொடரில் நெற்றிரவு நடைபெற்ற போட்டியில் பெங்களூர் மற்றும் டெல்லி அணிகள் மோதியது. இதற்கான டாஸில்…

3 hours ago