தமிழ்நாடு

காதலனை கொலை செய்த காதலியின் தந்தை…! காதலி எடுத்த விபரீத முடிவு..!

Published by
லீனா

கண்ணெதிரே காதலன் கொலை செய்யப்பட்டதால், காதலி தூக்கிட்டு தற்கொலை. 

கோவை மாவட்டம் சுந்தராபுரம் காந்திநகர் பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார் இவரது மகன் பிரசாந்த். இவர் தனியார் நிறுவனத்தில் லோடுமேன் ஆக வேலை செய்து வருகிறார். பிரசாந்த் வசந்த நகர் பகுதியை சேர்ந்த தன்யா என்பவரை காதலித்து வந்துள்ளார். இவர்கள் மூன்று ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில், ஆரம்பத்தில் இரு வீட்டாரும் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

பின் இருவருக்கும் திருமணம் செய்து வைப்பதாக சம்மதம் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், திங்கள்கிழமை தான்யா பிறந்தநாளன்று நள்ளிரவில் வாழ்த்து கூறுவதற்காக பிரசாந்த் தனது நண்பர்களுடன் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.12 மணியளவில் அவர் வீட்டின் கதவை தட்டியபோது தன்யாவின் உறவினர் மற்றும் அவரது தந்தை இருவரும் கதவை திறந்துள்ளனர்.

பிரசாந்த் குடிபோதையில் இருந்ததை பார்த்த தன்யாவின் உறவினர் விக்னேஷுக்கும் பிரசாந்துக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் வாக்குவாதம் கைகலப்பாக மாறிய நிலையில் பிரசாந்த் விக்னேஷை கட்டையால் தாக்கியுள்ளார். இதில் ஆத்திரமடைந்த விக்னேஷ் அங்கிருந்த கத்தியை எடுத்து பிரசாந்தை குத்தியுள்ளார்.

இதனையடுத்து பிரசாந்தை அவரது நண்பர்கள் மருத்துவமனைக்கு அழைத்து சென்ற நிலையில், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்த நிலையில், தன்யாவின் உறவினரான கால் டாக்ஸி டிரைவர் விக்னேஷ் (29), மற்றும் அவரது தந்தை மகாதேவன் (40) ஆகிய இருவரையும் போலீசார் கைது  செய்தனர்.

இந்த நிலையில் காதலனை வெட்டி கொலை செய்ததால் மனம் உடைந்த காதலி தற்கொலைக்கு முயற்சித்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய அவர், தூக்கிட்டு உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார்.

Published by
லீனா

Recent Posts

‘குட் பேட் அக்லி’ திரைப்படத்திற்காக வைக்கப்பட்ட 200 அடி உயர கட்-அவுட் சரிந்து விழுந்ததால் பரபரப்பு.!

நெல்லை : 'குட் பேட் அக்லி' படத்திற்காக ரசிகர்கள் தொடர்ந்து ஆவலுடன் காத்திருக்கின்றனர். நடிகர் அஜித் குமார் நடிப்பில், ஆதிக்…

18 minutes ago

ரெடியா இருத்துக்கோங்க.., சேப்பாக்கத்தில் சென்னை – கொல்கத்தா மோதல்.! இன்று டிக்கெட் விற்பனை.!

சென்னை : நடைபெற்று வரும் ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக சென்று கொண்டிருக்கையில், ரசிகர்கள் மிகவும் ஆர்வத்துடன் காத்திருந்த சென்னை…

55 minutes ago

”ஆங்கிலத்தில் கையெழுத்திடும் தமிழக அமைச்சர்கள்”.., தமிழில் போடக்கூடாதா? பிரதமர் மோடி கேள்வி.!

ராமேஸ்வரம் : பிரதமர் நரேந்திர மோடி இன்று, ராமேஸ்வரத்தில் பாம்பன் புதிய ரயில் பாலத்தை திறந்து வைத்தார். இது இந்தியாவின்…

13 hours ago

‘முடிவெடுப்பது நான் அல்ல’.., ஒருவழியாக ஓய்வு குறித்து மௌனம் கலைத்த தோனி.!

சென்னை : கடந்த 2-3 சீசன்களாக தோனியின் முழங்கால் பிரச்சினைகள், அவர் தொடர்ந்து பேட்டிங்கிற்கு தாமதமாக வருவது மற்றும் அவரது…

14 hours ago

டார்கெட் முடிக்காத ஊழியர்கள்… நாயை போல் அலைய வைத்து கொடுமைப்படுத்திய தனியார் நிறுவனம்.!

கொச்சி : கேரளாவின் பெரும்பாவூரில் ஒரு தனியார் நிறுவன ஊழியர் தரையில் வைக்கப்பட்ட கிண்ணத்தில் இருந்து விலங்குகளைப் போல தண்ணீர்…

15 hours ago

“அவர்களுக்கு அழ மட்டுமே தெரியும்”.., யாரை சொல்கிறார் பிரதமர் மோடி.?

ராமேஸ்வரம் : நாட்டின் முதல் செங்குத்து தூக்கு பாலமான பாம்பன் ரயில் பாலத்தை பிரதமர் திறந்து வைத்தார்.  பாம்பனில் கடலுக்கு நடுவே…

16 hours ago