80 வயது மூதாட்டிக்கு உதவிய பெண் காவலர்! குவியும் பாராட்டுக்கள்!

Published by
லீனா

80 வயது மூதாட்டிக்கு உதவிய பெண் காவலர்.

கடந்த மாதம் 29-ம் தேதி, பெண் ஒருவர் மாம்பலம் காவல் நிலைய தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு, அவர் ஹைதராபாத்தில் வசித்து வருவதாகவும்,  தனது  தாய் வசந்தா  என்பவர் சென்னை, தி.நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் தனியாக வசித்து வருவதாகவும், தற்போது கொரோனா காரணமாக அவர்களை அழைத்து வர இயலவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும், தனது தாய்க்கு இ-பாஸ் மற்றும் விமான டிக்கெட்டுகள் எடுத்துள்ளதால், அவரை சென்னை, விமான நிலையம் வரை அழைத்து செல்ல உதவி தேவை என்றும் அவர் கூறியுள்ளார். இதனையடுத்து, மாம்பலம் காவல் நிலைய ஆய்வாளர் பெண் காவலர் மகாலஷ்மி என்பவரிடம் விவரத்தைக் கூறி அந்த மூதாட்டிக்கு உதவுமாறு கூறியுள்ளார்.

காவலர் மகாலஷ்மி, மூதாட்டி வசந்தா சுப்ரமணியத்தை நேரில் சந்தித்து விவரங்களை கூறி, தங்களது மகளை பார்க்க ஐதராபாத்திற்கு செல்ல ஜுலை 1-ம் தேதிக்கு மகள் விமான டிக்கெட்டு எடுத்துள்ளதாகவும் கூறியுள்ளார். இதனையடுத்து, அந்த காவலர், வசந்தாவின் வீட்டிற்குச் சென்று அவரது உடைமைகள் மற்றும் பொருட்களை எடுத்துக் கொண்டு, தனது சொந்த செலவில் ஏற்பாடு செய்த தனியார் கார் மூலம் விமான நிலையத்தின் போர்டிங் வரை சென்று, உடைமைகள் மற்றும் பொருட்களுடன் நல்ல முறையில் மூதாட்டி வசந்தாவை விமானத்தில் அனுப்பி வைத்துள்ளார்.

இவரது இந்த சேவைக்கு பலரும் பாராட்டுக்கள் தெரிவித்துள்ள நிலையில், மூதாட்டி ஐதராபாத்தில் உள்ள மகளின் வீட்டிற்கு நல்லபடியாக வந்து சேர்ந்த மகிழ்ச்சியில் மூதாட்டியும் அவரது மகளும் பெண் காவலர் மகாலஷ்மிக்கு நன்றிகளை தெரிவித்துள்ளனர். இதுகுறித்து மூதாட்டியின் மகள், முகநூல் பக்கத்தில் ஒரு பதிவினை பதிவிட்டுள்ளார்.

அந்த பதிவில், நாங்கள் தமிழ்நாடு காவல் துறைக்கு மிகவும் கடமைப்பட்டுள்ளோம், தன்னுடைய தொலைபேசி அழைப்பின் மூலம், எனது 80 வயதான தாய்க்கு, சொந்த செலவில் கார் ஏற்பாடு செய்து விமானநிலையத்திற்கு அழைத்து சென்று உதவிய மாம்பலம் காவல் நிலைய காவலர் மகாலஷ்மிக்கு  நன்றி என தெரிவித்துள்ளார்.

Published by
லீனா

Recent Posts

நடிகை வழக்கில் தொண்டர்கள் திரள் நடுவில் காவல் நிலையத்தில் சீமான் ஆஜர்! 

நடிகை வழக்கில் தொண்டர்கள் திரள் நடுவில் காவல் நிலையத்தில் சீமான் ஆஜர்!

சென்னை : நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் புகாரின் பெயரில் பதியப்பட்ட வழக்குகளை முடித்து வைக்க வேண்டும் என சென்னை…

4 hours ago

சிறுமி மீது தவறு? சர்ச்சை பேச்சு எதிரொலி.! மயிலாடுதுறை ஆட்சியர் அதிரடி மாற்றம்!

மயிலாடுதுறை : கடந்த பிப்ரவரி 24-ம் தேதி மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பகுதியில் செயல்பட்டு வந்த அங்கன்வாடியில் பயின்று வந்த…

6 hours ago

தெறிக்கவிடலாமா.? GBU தரமான சம்பவம்., அஜித் ரசிகர்கள் கொண்டாட்டம்! டீசர் வீடியோ இதோ…

சென்னை : நடிகர் அஜித்குமார் நடிப்பில் வரும் ஏப்ரல் 10ஆம் தேதி வெளியாகி உள்ள திரைப்படம் குட் பேட் அக்லி.…

8 hours ago

AFGvAUS : 274 டார்கெட்., பவுலிங்கில் மிரட்டிய ஆஸ்திரேலியா! நிலைத்து ஆடிய ஆப்கானிஸ்தான்!

லாகூர் : சாம்பியன்ஸ் டிராபி தொடரின் 10வது போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இன்று விளையாடுகின்றன. இந்தப் போட்டி…

8 hours ago

“கைதுக்கு நான் பயப்படவில்லை. இப்போதே விசாரணைக்கு தயார்” சீமான் பரபரப்பு பேட்டி!

சென்னை : நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் வழக்கில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் விசாரணைக்கு நேரில் ஆஜராக…

9 hours ago

“விருப்பமில்லாமல் செய்தால் தான் அது பாலியல் வன்கொடுமை” சீமான் மீண்டும் சர்ச்சை பேச்சு!

தருமபுரி : நடிகை விஜயலட்சுமி, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது பாலியல் வழக்கு பதிவு செய்திருந்தார். இந்த…

11 hours ago