குமாரபாளையம் சிறுமி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் தாய் மகேஸ்வரியும் கைது செய்யப்பட்டுள்ளார் என கூறப்படுகிறது.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தை சார்ந்த கூலி தொழிலாளி ஒருவருக்கு 3 மகள்களும், 1 மகனும் உள்ளனர். இதில் 2 மகள்களுக்கும் திருமணம் நடந்து விட்டது. 3-வது மகள் (வயது 14) இவர் அருகில் உள்ள ஒருவரின் வீட்டுக்கு வேலைக்கு சென்று வந்துள்ளார். இதனால், தனது அக்கா வீட்டில் தங்கிகொண்டு வீட்டு வேலைக்கு சென்றுள்ளார்.
இதற்கிடையில், அக்கா கணவன் சின்ராஜ் மற்றும் சிறுமி வேலைக்கு சென்ற அந்த வீட்டின் உரிமையாளர் உட்பட 12 பேர் தொடர்ந்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து வந்த்துள்ளனர். சிறுமியை பாலியல் வன்கொடுமையை நடப்பதை அக்கம்பக்கத்தினர் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து 12 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அதில் 11 பேரை போலீசார் கைது செய்தனர்.
இந்நிலையில், சிறுமி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் தாய் மகேஸ்வரியும் உடந்தையாக இருந்ததாக கைது செய்யப்பட்டுள்ளார் என கூறப்படுகிறது. பலாத்காரம் தொடர்பாக 13 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் தாய் உட்பட 12 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டுள்ளன. தப்பி ஓடிய முருகன் என்பவரை தேடும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
சென்னை : 18-வது ஐபிஎல் சீசன் இந்த ஆண்டு வருகின்ற 22-ஆம் தேதி (சனிக்கிழமை) தொடங்கி வரும் மே 25-ஆம்…
சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி - சட்டப் பேரவை உறுப்பினர் செங்கோட்டையன் இடையே அதிருப்தி நிலவுவதாக சமூக…
டெல்லி : ஐபிஎல் 2025 சீசன் இன்னும் ஒரு வாரத்திற்குள் தொடங்கவுள்ள நிலையில், வரப்போகும் இரண்டு மாத கால கிரிக்கெட்…
சென்னை : 2025 - 2026 ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை அத்துறையின் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்து, பல்வேறு புதிய…
வாஷிங்டன் : அமெரிக்க விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் ஜூன் மாதம் முதல் சர்வதேச…
சென்னை : தமிழ்நாட்டில் புதிய தேசிய கல்விக்கொள்கை வழியாக மத்திய அரசு இந்தியை திணிக்க முயற்சிப்பதாக தொடர்ந்து திமுக அரசு…