மதுரை மாவட்டம் செக்காணூரணி அருகே வைரமுருகன் மற்றும் சௌமியா என்ற தம்பதிக்கு கடந்த ஜனவரி 31-ஆம் தேதி ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது. இவர்களுக்கு ஏற்கனவே இரண்டரை வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் கடந்த 2-ஆம் தேதி புதிதாக பிறந்த குழந்தை இறந்துவிட்டதாக கூறி வீட்டின் அருகிலேயே அக்குழந்தை புதைத்துள்ளனர்பெற்றோர். இந்நிலைய்யில், குழந்தையின் இறப்பு குறித்து அக்கம் பக்கத்தினர் சந்தேகம் எழுப்பவே கிராம நிர்வாக அதிகாரி சீர்மிகு காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார்.
இதனைத் தொடர்ந்து உசிலம்பட்டி வட்டாட்சியர் திரு. செந்தாமரை, துனை கண்காணிப்பாளர் திரு. ராஜா தலைமையிலான குழுவினர் புதைக்கப்பட்ட குழந்தையின் உடலை தோண்டி எடுத்து உடற்கூறு ஆய்வு நடத்தினர். இதில் பிறந்து 31 நாளே ஆன பச்சிளம் பெண் குழந்தையை கள்ளிப்பால் கொடுத்து பெற்றோரே கொன்றது தெரியவந்துள்ளது. இதனை அடுத்து வைரமுருகன் மற்றும் சௌமியா மற்றும் வைரமுருகனின் தந்தை ஆகியோரை செக்காணூரணி சீர்மிகு காவல் துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பட்டுக்கோட்டை : தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே நடுவிக்காடு பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியானது முறையான சிபிஎஸ்இ (CBSE…
டெல்லி : நாளை முதல் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான கிரிக்கெட் போட்டிகள் நடைபெற உள்ளன. இதில் முதல் போட்டியானது நாளை…
டெல்லி : இந்திய தலைமை தேர்தல் ஆணையராக இருந்த ராஜேஷ் குமார் இன்று (பிப்ரவரி 18) பதவி ஓய்வு பெறுகிறார்.…
துபாய் : 2025 சாம்பியன்ஸ் டிராபியின் தொடக்க ஆட்டத்தில் இந்திய அணி பிப்ரவரி 20 அன்று துபாயில் பங்களாதேஷை எதிர்கொள்கிறது.…
சென்னை : பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய 'பிங்க்' ஆட்டோ திட்டம் விரைவில் அறிமுகமாக உள்ளது. இதற்காக ஆட்டோ முழுவதும் பிங்க்…
சென்னை : தேசிய கல்வி கொள்கை 2020 பற்றிய பேச்சுக்கள் தற்போது தமிழ்நாட்டில் விஸ்வரூபம் எடுத்து வருகிறது. மத்திய அமைச்சர்…