காய்கறி சந்தைகள் தயாராவதில் தாமாதம்! வியாபாரிகள் ஏமாற்றம்!

Default Image

திருமழிசை சந்தை திறக்கப்படாத  காரணத்தால், வியாபாரிகள் ஏமாற்றத்துடன் திரும்பியுள்ளனர்.

தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸின் தீவிர பரவலை கட்டுப்படுத்த பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தமிழகத்தை பொறுத்தவரையில், இதுவரை 4825 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

அதிலும், சென்னையில் தான் அதிகமானோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இங்கு 2,000-க்கும் அதிகமானோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து, கோயம்பேடு சந்தை கொரோனா வைரஸ் காரணமாக, திருமழிசை பகுதிக்கு மாற்றப்படுவதாக கூறப்பட்டது. 

இந்நிலையில், இன்று முதல் திருமழிசையில் காய்கறி வியாபாரம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், ஓரிரு வியாபாரிகள் காய்கறிகளுடன் அங்கு வந்துள்ளனர். சந்தை திறக்கப்படாத  காரணத்தால், வியாபாரிகள் ஏமாற்றத்துடன் திரும்பியுள்ளனர். மேலும், வெளி மாநிலங்களில் இருந்து அனுமதியின்றி உருளைக்கிழங்கு ஏற்றி வந்த லாரிகளை போலீசார் எச்சரித்து, திருப்பி அனுப்பி வைத்துள்ளனர். 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்